"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Friday, July 25, 2008

மீண்டு வா தமிழா..........கை கொடு!

தமிழுக்குள் சாதியை
ஒழியுங்கள்!
தமிழெனும் சாதியை
வளர செய்யுங்கள்!
தமிழா!
எந்த இனத்தவனும்
தன்னெறியை துறந்ததில்லை!
பெண்ணுக்காய் பொன்னுக்காய்
மண்ணுக்காய் நீ-மட்டும்
உன்னெறியை துறக்கலாமோ?
கடல் கடந்துவந்து
பொன்னைக் காட்டியதும்
முதுகெலும்பைத் துறந்து
ஓடோடிப்போனவனே!
பார்த்தாயா இன்று
உன் நிலையை!
வந்தவன் உன்
மண்ணிலுள்ள வளமெல்லாம்
குடித்தான்!
பண்க்கார நாடானான்!
தனக்கு உணவாக்க
உனக்கு விறகுதந்தான்!
நீயோ;
அது செய்தான்
இது செய்தான்
என்று விறகு
வாங்கிய கதையை
தம்பட்டம் அடிக்கின்றாய்!
வந்தவன்,
உன் பொட்டை
அழித்தான்
பூவை அழித்தான்
நெற்றியில் இருந்த
பட்டையை அழித்தான்!
உனக்கு வெள்ளைத்
தோளைத் தந்தானா?
நீ போரில்
சாகும்போது ஓடோடி
வந்தானா?
நலந்தானேனும் கேட்டானா?
வந்தவன் அழித்தது
பொட்டும் பூவும்
பட்டையையும் மட்டுமல்ல!
உன் மண்ணுரித்தையும்தானடா!
நீ செய்தபிழை
பொறுக்கா சங்கிலியன்
மதிகெட்டு கொலைவெறி
பூண்ட வேளையிலே
வந்தவன் உன்னைக்காக்க
துணிந்தானா?
அன்றி தன்னைக்காக்க
பத்திரமாய் தன்னுடமைகளோடு
அம்போ என்றுஉன்னைவிட்டு
ஓடோடிச்சென்றானா?
சொல்லடா தமிழா
சொல்லு!
ஆபிரிக்காவில் இப்படித்தானடா
மதம் பரப்பினான்!
மொழி பரப்பினான்!
சுரண்ட இல்லாதபடி
எல்லாத்தையும் சுரண்டினான்!
கடைசியில் எயிட்சைக்
கொடுத்தான்!
கை கழுவிவிட்டுவிட்டான்!
நாளைக்கு உன்க்கும்
அதுதான் கதி!
தமிழா!
உன் தாய்
உன்னை அழைக்கிறாள்!
கல் தோன்றி
மண் தோன்றாக்
காலத்தே தோன்றிய
மூத்தகுடி நீயடா!
அன்றே தோன்றியது
உன்னுடைய நெறியுமடா!
ஆரியன் வந்தான்!
தன்னெறி ஆக்கினான் - உன்
நெறியை!
தனக்கேற்ற மாதிரியும்
ஆக்கினான்!
சாதியைப் படைத்தது
ஆரியன்!
உன் நெறியல்ல!
அன்று மௌனியாய்
இருந்துவிட்டு இன்று
பிதற்றுகின்றாய் சாதி
செப்பும் நெறியென்று!
கருப்புச்சாதி வெள்ளைச்சாதி
அங்கு உதுதான்
பிரச்சினையாம்!
ஆயிரம் சாதி
அரேபியாவிலும் உண்டடா!

தாயில் குறையெனின்
மாற்றான் தாயை
உன் தாயென்று
நவிலத்தான் முடியுமா?
முலையில்லாத் தாயிடம்
பாலை எதிர்பார்க்கத்தான்
முடியுமா?
நவிலடா தமிழா
நவிலு!

உன் பூட்டனும்
பூட்டனின் பூட்டனும்
போட்டது பட்டையடா!
உன் பூட்டன்
சொன்ன சித்தமருந்து
பொய்யாய் போகவில்லை!
உன் பூட்டன்
சொன்ன சோதிடமும்
பொய்யென்று விஞ்ஞானத்துணையுடன்
நிறுவிக்க உன்னால்
முடியவில்லை!
உன் பூட்டன்
கட்டிய கட்டிடங்களும்
செதுக்கிய சிற்பங்களும்
உன் விஞ்ஞான
மூளைக்கு விளங்காத
புதிர்கள்!
தஞ்சை பெரியகோவில்
கட்டிய சூத்திரமே
தெரியவில்லை கட்டிட
விஞ்ஞானம் பயின்ற
உனக்கு!
மதுரை மீனாட்சி
திரு அரங்கம்
எல்லாமே உன்
கற்பனைக்கு அப்பாற்பட்டவை!
அத்தனையும் உன்
பூட்டனின் திறமையடா!
அவன் சொன்ன............
அவன் வாழ்ந்த.........
தமிழர் நெறி
எப்படிப் பொய்த்துப்போகுமடா!
பௌத்தமும் சமணமும்
உன்னைத்தேடி வந்தவேளை
இரண்டுமே உண்டு
எங்கள் நெறியிலென்று
சாதியைத் தாங்கிக்கொண்டு
வழியனுப்பி வைத்தவனே!
யார் கண்ணடா
உன்மீது பட்டது?
வா..........................
மீண்டு வா....................
கை கொடு!
"சாதியில்லா வேதநெறி
தழைத்தோங்க மிகு
சைவத்துறை விளங்க"
வா..............
தமிழா வா!
கை கொடு!
தூங்கினது போதும்!
வா..............மீண்டு வா!
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "மீண்டு வா தமிழா..........கை கொடு!"

Post a Comment