"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Saturday, December 27, 2008

விஞ்ஞானம் வியக்கும் வேதநெறி

ஆய கலைகள் அறுபத்தினான்கு, அதில் சோதிட சாத்திரம்(வான சாத்திரம்),கணிதம்,சித்த மருத்துவம் என்பன மணிகளாய் பூத்து வேதநெறியை அழகுபடுத்துகின்றன என்றால் மிகையாகாது.மெஞ்ஞானம் என்பது மூலமூர்த்தியாகவும் ஏனைய மருத்துவம்,கணித விஞ்ஞானம்,வான சாத்திரம்,அரசியல் என்ற ஏனையவை பிரகார மூர்த்திகளாகவும் கொண்ட மேன்மைகொள் நெறியே வேதநெறி.இதைத்தான் நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம்...
மேலும் படிக்க...

Sunday, December 14, 2008

நெறிதவறும் பிராமணரும் ஈழத்தில் சைவத்தை சிதைக்கும் வடநாடும்

கடற் கன்னிகளின் தமிழிசையால் அழகான ஈழமணி நாட்டை அழகுபடுத்தும் மட்டக்களப்பு மாநகரிலே அண்மையில் நடந்த திருமால் ஆலய சங்காபிடேகத்தின் இறுதியில் பிரசங்கம் நடைபெற்றது. ஆலயந் தோறும் பிரசங்கம் நடைபெறல் வேண்டும் என்ற நாவலர் பெருமானின் ஆவலை சில ஆலயங்களே சிறப்பாகக் கையாளுகின்றன. இவ்வாலயத்திலும் அவ்வாறு நடைபெற்ற பிரசங்கத்திலே சங்காபிடேகம் செய்வித்த பிரதமகுருக்கள்...
மேலும் படிக்க...

Saturday, November 22, 2008

சைவ நெறியை அழிக்கத்துடிக்கும் இந்துவை போற்றுதல் வெட்கக்கேடானது தமிழுக்கும் தமிழருக்கும்

இந்து மதத்தை ஒர் தனித்துவமான மதமாக கருத முடியாது எனவும், பௌத்தம் மற்றும் வைதீக மதத்தின் கலவையே இந்து மதம் எனவும் ,ஏனைய மதங்களைப் போன்று இந்து மதத்திற்கு நீண்ட வரலாறு இல்லை எனவும் இந்து மதத்தை ஓர் கஞ்சியாகவே கருத வேண்டும்" என்ற ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரரின் கருத்தினால் "கொக்குவில் இந்து" எனும் அன்பர் என்று "இந்துக்களின்"...
மேலும் படிக்க...

Tuesday, November 4, 2008

தமிழன் கண்ட முருகன்

எம்.கே.ஈழவேந்தன் ஐயா கந்த சட்டி விரதத்தை முன்னிட்டு எழுதிய "தமிழன் கண்ட முருகன்" எனும் கட்டுரையினை தினக்குரலில் இணையத்தளத்தில் சுவைக்கும் பேறுபெற்றேன். அடியேன் சுவைத்த ஐயாவின் தமிழ்த்தேன் ஒழுகும் குறித்த கட்டுரைக்கு இங்கு இணைப்புக் கொடுக்கின்றேன்.ஐயாவினது கட்டுரையைப் படித்து சுவைக்க அழுத்துங்கள்."தமிழன் கண்ட முருகன்"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்மேன்மைகொள்...
மேலும் படிக்க...

Wednesday, October 15, 2008

யுத்தசூழலில் சைவத்தின் இக்கட்டான நிலை

திருமூலரால் சிவபூமி என சிறப்பிக்கப்பட்ட இலங்கை மண்ணில் ஆரியத்தின் கண்பட்டதா என்னவோ தெரியாது இராமன் வந்தது தொட்டு இன்றுவரை இரத்தந்தான்.யுத்தத்தின் கோரம் எங்கள் மக்களுக்கு பழக்கப்பட்டதொன்றுதான்.ஆனால் யுத்த சூழ்நிலைகளில் அரசியல்பலம் அரசியல் பாதுகாப்பு போன்ற எக்கவசங்களும் அற்ற எமது சைவநிறுவனங்கள் எந்தவித உரிய ஆக்கபூர்வமான தொண்டுகளை செய்யமுடியாது இடம்பெயர்ந்து...
மேலும் படிக்க...

Wednesday, October 8, 2008

சைவப் பண்பாட்டில் பெண்தெய்வ வழிபாடும் பெண்ணும்

அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்று உலகுக்கு அறிவித்த சைவப் பண்பாட்டிலே நவராத்திரி விரதம் பள்ளிக்கூடம் தொட்டு பல்கலைக்கழகம் அடங்கலாய் வேலைத்தளம் என்று விரிந்து மக்களோடு ஒன்றி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது யாவரும் அறிந்ததொன்றே.நவராத்திரிக்கு சிறப்பு...
மேலும் படிக்க...

Sunday, September 21, 2008

தமிழ் நெறிக்கு தமிழால் மீண்ட சி.வை.தாமோதரம்பிள்ளை

அண்மையில் தினக்குரல் இணையத்தளத்தில் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களைப் பற்றி அருமையான கட்டுரை வெளியாகிவிருப்பதைக் கண்டு பயன்பெற்றேன்.அதில் தாமோதரம்பிள்ளை அவர்கள் மதம்மாறவேண்டிய சூழ்நிலைக்கு ஊந்தப்பட்டதாக பொருட்பட எழுதப்பட்டுள்ளது. இதில் அடியேன் உடன்பாடு...
மேலும் படிக்க...

Monday, August 25, 2008

புராணங்கள் கட்டுக்கதையா? (சேது சேதுபடமொக்க சோகத்தை ஊட்டாதா?)

விஞ்ஞான ஆய்வுகள் என்னென்னவோ சொல்லுகின்றன. ஒருவர் உண்மை என்று நிறுவிக்கின்றார். இன்னொருவர் மறுக்கின்றார். குழப்பத்தில் சாதரண மக்கள்! விளைவு இதுதான் சந்தர்ப்பம் என்று எப்பம்விடத்துடிக்கும் அன்னிய சக்திகள் தமக்கு சாதகமாக மக்களின் குழப்பநிலையை பயனாக்குகின்றனர்.அமெரிக்காவில்...
மேலும் படிக்க...

Friday, August 22, 2008

பெரியாரும் விவேகானந்தரும்

சமீபத்தில் வலைப்பூ ஒன்றில் விவேகானந்தரை தூற்றி ராமசாமி முதலியார் ஆகிய பெரியாரின் எழுத்து பிரசுரிக்கப்பட்டிருந்தது. அப்போது என்னத்தை சொன்னாலும் பயனில்லை என்று விட்டுவிட்டேன். ஆனால் அண்மையில் என் உள்ள ஆதங்கத்தை அறிந்த எம்பெருமான் சிவபெருமான் திருவருளால்...
மேலும் படிக்க...

Monday, August 18, 2008

புராணத்தில் இருந்து காவடி பற்றியும் நந்தி பற்றியும்

முருகனுக்கு காவடி தோன்றிய கதைஅகத்தியர் பெருமான் கயிலையில் பூசித்த சிவகிரி, சக்திகிரி எனும் குன்றுகளை தென் திசைக்கு எடுத்துச்செல்ல விரும்பி தன்னுடைய சீடனான மிகவும் பலசாலியுமான இடும்பனை பணித்தார். இடும்பன் உடனே அவ்விரு குன்றுகளையும் பெயர்த்து காவுதடி ஒன்றில்...
மேலும் படிக்க...

Monday, August 11, 2008

ஈழ நாட்டிலே நல்லூரும் கத்திரகம ஆகிவிட்ட கதிர்காமமும்

இன்றைய ஈழ பண்பாட்டின் அடையாளம் நல்லூர் என்றால் அது மிகையாகாது. ஈழ வள நாட்டில் தொன்று தொட்டு வழிபடப்படும் வழிபாடுகளில் முருக வழிபாடு தனித்துவமான சிறப்பாக பின்பற்றப்படும் வழிபாடாகும்.அன்றைய கால மன்னர்களின் நாணயங்களில் வேல் குறியீடு காணப்படுவது முருக வழிபாடு எவ்வளவு மக்களோடு ஒன்றியிருந்தது என்பதை வெள்ளிடை மலையாய் நிருபணமாக்குகின்றது. ஈழத்தின் சமய சின்னமாக...
மேலும் படிக்க...

Monday, August 4, 2008

பெரியாரும் தமிழர்நெறியும் (தமிழ் ஓவியாவிற்கு ஒரு விளக்கக்கட்டுரை)

(தமிழ் ஓவியாவின் வலைப்பூ:- http://thamizhoviya.blogspot.com/2008/08/blog-post_3663.htmlவின் வலைப்பூவில் சிவனும் உமையும் நீண்டநேரம் கூடியும் குழந்தை பிறக்காததால் சிவபெருமானின் விந்தை கொண்டு படைக்கப்பட்டதே முருகன் என்று வால்மீகியின் இராமாயணப் பாடலையும் கந்தபுராணத்தில் தன்னால் பிறக்கவில்லை என்று உமைவருந்துவதாகவும் ஆதலால் கந்தபுராணமும் அதை ஏற்றுக்கொண்டுள்ளது...
மேலும் படிக்க...

Thursday, July 31, 2008

ஈழச்சைவக்குடிமகனின் பார்வையில்.........................

என் கடன் பணிசெய்து கிடப்பதே என்ற அப்பரின் சரியையும் ஞானப்பால் குடித்த திருஞானசம்பந்தரின் கிரியையும் ஒருங்கே தனது வாழ்வியலில் கடைப்பிடித்து சைவவாழ்விற்கு இலக்கணமாய் தனது வாழ்வியலை சைவ உலகிற்கு சமர்ப்பணம் செய்த திருநாவலர் பெருமானின் அவதாரபூமியாகிய ஈழவளநாடு எண்ணற்ற சைவ சான்றோர்களையும் சிவதொண்டர்களையும் காலத்துக்குகாலம் பெறுவது சிவபூமி இதுவென திருமூலர்...
மேலும் படிக்க...

Sunday, July 27, 2008

தமிழோடு வாழ்வோம்

தேம் மதுரத்தமிழோசை உலகமெல்லொம் பரவச்செய்யவேண்டும் என்றார் மகாகவி பாரதி. ஆனால் இன்று தமிழைக் காக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நாம் உள்ளோம்.பல வ்கையான சவால்களை தமிழ் இன்று சந்தித்தாலும் முக்கியமான இரண்டு வகையான சவால்களை இங்கு நான் அலசியாரய விரும்புகின்றேன்.ஒன்று அசிங்கமான தமிழ்வார்த்தைகள் என்றும், பல்வேறு காரணங்களாலும் பொருள்சிதைவடையும் தமிழ்ச்சொற்கள்....
மேலும் படிக்க...

Friday, July 25, 2008

மீண்டு வா தமிழா..........கை கொடு!

தமிழுக்குள் சாதியைஒழியுங்கள்!தமிழெனும் சாதியைவளர செய்யுங்கள்!தமிழா!எந்த இனத்தவனும்தன்னெறியை துறந்ததில்லை!பெண்ணுக்காய் பொன்னுக்காய்மண்ணுக்காய் நீ-மட்டும்உன்னெறியை துறக்கலாமோ?கடல் கடந்துவந்துபொன்னைக் காட்டியதும்முதுகெலும்பைத் துறந்துஓடோடிப்போனவனே!பார்த்தாயா இன்றுஉன் நிலையை!வந்தவன் உன்மண்ணிலுள்ள வளமெல்லாம்குடித்தான்!பண்க்கார நாடானான்!தனக்கு உணவாக்கஉனக்கு...
மேலும் படிக்க...

Tuesday, July 22, 2008

இந்துத்துவக் கொள்கையில் மறையும் சைவமும் தமிழும்

"என்று தோன்றினாள் எங்கள் தாய்" என்று பாரதி வியந்து பாடுகின்றான். ஆம், ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்சோதி சிவம் மட்டும் அல்ல தமிழும் தான். ஆதலால் தான் சிவனின் மகள் என்று தமிழை பாரதி பாடியுள்ளான். அப்படி அவன் குறிப்பிட தொன்று தொட்டு தமிழர்நெறியாக சைவநெறி விளங்கிவருவதும் காரணமாயிற்று.தொன்மையான புகழுடைய சைவநெறி காலப்போக்கில் வடநாட்டால் ஏழு நெறிகளாக...
மேலும் படிக்க...