"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Saturday, February 23, 2013

டேவிட் அப்துல்லா பாலமுருகன்! பெரியாரிஷ்டின் சிவலிங்கம்!!!!


எல்லோரும் பெர்ணான்டோவும் பீட்டரும் மைக்கலும் டேவிட்டும் ரகுமானும்,அப்துல்லாவும்,பர்சாட்டும் ஆகிவிட்டால், சுந்தரன் என்றும் வடிவேல் என்றும் பாலமுருகன் என்றும் பெயர் வைப்பது யார்தானோ? தமிழ் அடையாளத்தைப் பேணுவது யார்தானோ? எல்லாச் சமயங்களும் தமிழை வைத்து தம்மை வளர்த்து தமிழ்ப் பெயர்களை மங்கச்செய்கின்றன!!! சைவநெறிதான் தனித்தமிழ் இயக்கம் என்று தமிழுக்காய் உழைக்கிறது!!! ஆனால் பெரியாரிஷ்டுக்களுக்கு டேவிட்டும் அப்துல்லாவும் தெரிவதில்லை......சுந்தரலிங்கம் என்பதில் உள்ள இலிங்கம் மட்டும் கண்ணுக்கு குத்துகின்றது!!!!!!

குறி என்றால் அடையாளம் என்று பொருள். தமிழர் குறி என்றால் தமிழரின் அடையாளம்!! ஆண்குறி என்றால் ஆணின் அடையாளம்!!! இலிக்கம் என்பது குறி என்னும் சொல்லையே தனித்து குறிக்கின்றது. அது கடவுளின் அருவுருவத்திருமேனியைக் குறிக்கப் பயன்படுத்துவதால் குறி என்று அதாவது சங்கதமொழியில் இலிங்கம் என்று அழைக்கப்படுகின்றது. ஆனால் இந்தப் பெரியாரிஷ்ட்டுக்களுக்கு "ஆண்" என்றசொல்லை இலிங்கத்திற்குமுன் தாமே இட்டுக்கட்டி இலிங்கம் ஆண்குறியைக் குறிக்கின்றதென்று மோட்டுத்தனமாகப் பிதற்றுகின்றனர்!!! பகுத்தறிவு மட்டுமல்ல படிப்பறிவும் பட்டறிவும் இல்லாத மடையர்கள்!!!!

பெண் ஆண் அலி என்னும் பெற்றியன் காண்க- திரு அணடப்பகுதி(57) திருவாசகம்
இறைவன் ஆண்-பெண்-அலி என்னும் இயல்புகள் அற்றவன் என்று திருவாசகம் படித்திலன் இந்த மூடன்!!!
அதுசரி; தமிழைக் காட்டுமிராண்டிமொழி என்றுசொல்லும் பெரியாரிஷ்ட்டுக்களுக்கு திருவாசகத்தின் அருமை புரியுமா என்ன?




பாலுறவில் ஆண்குறியின் நுனிப்பாகம் பெண்குறியினுள் செல்வதுதானே முறை? சிவலிங்கத்தில் சக்திபீடத்தில் இருந்து அதாவது மோடர்கள் பெண்குறி என்று பிதற்றும் பகுதியில் இருந்து வெளிநோக்கியவாறெல்லவா இலிங்கத்தின் முனைப்பகுதி காணப்படுகின்றது!!!!

படம்1 விளங்கப்படுத்துவது ஆண்குறி பெண்குறியினுள் நுழைவதை! படம்2 பெண்குறியென்று பெரியாரிஷ்ட்டுக்களால் சொல்லப்படும் சக்திபீடத்தில் காணப்படும் இலிங்கம்! இலிங்கத்தின் முனைப்பகுதியோ இங்கு ஆண்-பெண் உடலுறவைக் குறிக்கின்றதென்றால் இயற்கைக்கு முரணாக எப்படி பெண்குறியிலிருந்து வெளிநோக்கியவாறு எப்படி ஆண்குறியின் முனைப்பகுதி இருக்கமுடியும்?

கடைசியில் இவர்கள் நாய்க்கும் பூனைக்கும் உலகிலுள்ள உயிர்கள் அனைத்துக்கும் இறைவன் இயற்கையிலேயே வழங்கிய சேக்கைப்போர் அறிவுகூட இல்லாத மூடர்களாகிவிட்டார்கள்!!!!

சக்தி என்பது வலு(ENERGY) என்பதுதான் பொருள்!!! அதுதான் சித்தாந்தம் சொல்வதும்!!! அந்த சக்தியை பெண்ணுருவாக வழிபடுகின்றனரேயொழிய உண்மையில் அது பெண்ணல்ல!!! சிவலிங்கம் ஆணையோ,பெண்ணையோ,ஆண்-பெண் சேர்க்கையையோ குறிக்கும் என்பது பகுத்தறிவு,படிப்பறிவு,பட்டறிவு,பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் ஏன்....பூக்களுக்கும் புழுக்களுக்கும் இருக்கும் பாலுறவு தொடர்பான இயற்கை அறிவுகூட இல்லாத பெரியாரிஷ்ட்டுக்களின் மோட்டுத்தனம் என்பது வெள்ளிடைமலை!!!

வெய்யிலுக்குள் கருப்புச்சட்டை அணிவது கூடாது என்பது விஞ்ஞானம்!!! அதைத்தான் சமயமும் கருப்பாடை அணிவதைத் தவிர்க்கச் சொல்லியது!!! ஆனால் மோட்டுத்தனத்தின் உச்சத்தில் விஞ்ஞானப்பாடத்திட்டத்தில் சிறுவயதிலேயே கருப்பு வெய்யிலுக்கு கூடாது என்று சொல்லிக்கொடுத்தும் திருந்தாது கருப்புச்சட்டை போட்டுத்திரியும் வடிகட்டின முட்டாள்களுக்கு இந்தப் கட்டுரையால் ஏதேனும் பயன் உண்டாகுமா?

இலிங்கத்துக்குத்தான் வெள்ளைக்காரர் பிழையான பொருளைக் கொடுத்தமையால் இந்த மோட்டுச்சாம்பிராணிகள் தவறாகப் பொருள்கொள்கின்றனர் என்று வைத்துக்கொண்டால் ஆவுடையப்பன் என்ற பெயருக்கு எப்படி ஒரு பொருள்கண்டுள்ளார்கள் என்று பார்த்தீர்களா?
பெண்குறிக்கு அப்பன்!

இந்த மோட்டுச்சாம்பிராணிகளுக்குத் தமிழ்படிப்பித்துக் கொடுத்த தமிழாசான் யாரோ? அதுசரி தமிழைக் காட்டுமிராண்டிமொழி என்ற கன்னடரின் அடிபொடிகளுக்கு எப்படித் தமிழ் தெரியும்?

ஆவுடையப்பன்
ஆ-பசு (தமிழில்)
பசு என்பது உயிர்களை சைவசமய இலக்கியங்களில் குறிக்கும்!
உயிர்களுக்கு தந்தையாக விளங்குபவர் என்பதுதான் அதன் இயல்பான/வெளிப்படையான பொருள்!!! இதில் எந்தச் சொல்லுக்கு பெண்குறி என்று பெரியாரிஷ்ட்டு மூடன் பெயர்வைத்தான் என்று என் படிப்பறிவுக்கும் பகுத்தறிவுக்கும் பட்டறிவுக்கும் விளங்கவேயில்லை.....யாரேனும் தமிழாசிரியர்கள் சொல்லித்தருவார்களா?

"ம்மா" என்றுதான் குழந்தை பிறந்தவுடன் அழைக்கின்றது!!! பஞ்சணைப்போரிலும் இதே ஒலிதான் என்று பட்டறிந்தோரும் அறிவர்! அகநானூறு படித்தோரும் அறிவர்!!!
நல்ல காலம் அம்மா என்றசொல் ஆபாசமென்று தமிழைக் காட்டுமிராண்டியென்று சொன்ன ஈ.வெ.ராவின் அடிபொடிகள் சொன்னாலும் சொல்வார்கள்!!!! கவனம்!!!

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள் ஒரு சைவசித்தாந்தி! திருவள்ளுவர் ஆண்டு நடைமுறையைக் கொண்டுவந்தவர்கள் சைவசித்தாந்திகளே! தமிழ் செம்மொழி ஆனதென்றால், அது தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர், சி.வை.தாமோதரம்பிள்ளை,ஆறுமுகநாவலர் பெருமான் போன்ற சைவசித்தாந்திகள் தமிழேடுகளைத் தேடித்தேடி அலைந்து கண்டெடுத்து பதிப்பித்ததினாலேயே!!! தமிழ் செம்மொழி ஆனதென்றால் அது சைவாதீனங்கள் காத்துவைத்திருந்த சைவ-சமண-பௌத்த இலக்கியங்களினாலேயே!!! இந்தப் ஈ.வெ.ரா  தமிழ் இலக்கியங்களை அழித்துவிடு என்றார்!!! திருக்குறளைத் திட்டித்தீர்த்தார்!!! 

ஆக; பெரியாரிஷ்ட்டுக்களிடம் வேண்டுவது யாதெனில் தமிழை எப்படிப் பாதுகாக்கவேண்டுமென்று திராவிட இயக்கங்களைவிட சைவத்தமிழருக்கு நன்றாகத் தெரியும்!!!! நீங்கள் உங்கள் மணியம்மை-குஷ்புவம்மை விடயங்களை இரசித்துக் கதைத்து காலத்தைக் கழியுங்கள்!!!! அதுபோதும்!!!!

மேலும் படிக்க...