"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Saturday, January 14, 2012

தைத்திருநாளும் திருநெறிச்சால்பும்


சூரியவழிபாடு தொன்றுதொட்டு மனிதக்குடியில் இருந்தவந்த ஒன்றே! எந்தவொரு தனிப்பண்பாட்டுக்கும் உரிய அலகாக சூரியவழிபாடு இருந்ததில்லை!!! ஆயினும் பிற்காலந்தில் எழுந்த மதங்கள் முன்னர் இருந்த வழிபாடுகளை அழிப்பதிலும் தடுப்பதிலும் இருந்ததனால் உலகில் சூரியவழிபாடு மறையத்தொடங்கிற்று. ஆயினும் இந்தியப் பெருங்கண்டத்தில் சமயத்துறையில் எந்தவொரு தெய்வவழிபாடும் வெறுக்கப்படவில்லை! எனவே சூரியவழிபாடும் சைவ-வைணவ சமயத்துறைகளில் சிறப்பான இடம்பெற்றன!

அந்தவகையில்;
சூரியதேவனை சிவபெருமானின் அட்டமூர்த்தவடிவங்களில் ஒன்றாக சிறப்பித்து சூரியவழிபாட்டை சைவசமயம் சிறப்படையச்செய்துள்ளது என்றால் மிகையில்லை!!!

தைப்பொங்கல் திருநாள் என்பது சூரியனுக்கும் உழவர்களுக்கும் உழவுக்கு உதவுகின்ற பசு,காளை மாடுகளுக்கும் நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டு தமிழர்கள் தமது வாழ்வில் தொன்றுதொட்டு கொண்டாடிவருகின்ற திருநாளாகும். இன்று சில அரசியல் விசமிகள் இந்த திருநாளுக்கும் மதவழிபாட்டுக்கும் எந்தத்தொடர்ப்பும் இல்லை என்பதுபோல் ஒருமாயையை ஏற்படுத்தி அதனூடாக தமது கருப்புச்சட்டை அரசியலை அரங்கேற்றி வருகின்றனர்!!! தமிழர்களின் உணர்வோடுகலந்த இந்த இனியநாளிளை சைவநெறிச்சால்பில் இருந்து பிரித்தெடுத்தால்த்தான் மதமாற்றங்களை எளிதே செய்யமுடியும் என்பதனாலும் புறச்சமயத்தவர் இது மதவிழா அல்ல என்பதுபோல் தலையாட்டுகின்றனர்!!!!

சூரியவழிபாட்டை கிருஷ்வமதமும் இஸ்லாமியமதமும் மறுக்கின்றன!!! எருது,பசு வழிபாட்டுக்குரிய மாட்டுப்பொங்கலும் இம்மதங்களின் புனிதநூல்களால் ஒதுக்கப்படும் மிருகவழிபாட்டு நிகழ்வுகளே!!!! எனவே; தைப்பொங்கல் என்பது யதார்த்தமாகவே கிருஷ்தவத்தமிழர்களிடமிருந்தும் இஸ்லாமியத் தமிழர்களிடமிருந்தும் மதரீதியாக அந்நியப்படுகின்றது!!! எனினும் சில தேவசபைகளில் தைப்பொங்கல் கொண்டாட்டங்களை மதமாற்றச்சூழ்ச்சிகளுக்காக தமது மதச்சட்டங்களை கண்டுகொள்ளாது ஏற்பாடுசெய்கின்றமை வழமையாகிவிட்டது.கொடியேற்றம்,மேள-தாள நாதசுவர இசை,தேரோட்டம் ஆகியவற்றை தமது திருச்சபைகளில் புகுத்தியவர்களுக்கு இதுவொன்றும் புதிதல்ல!!! திருவள்ளுவர் கிருஷ்வர் என்று ஆராய்ந்து கண்டுபிடித்தவர்களுக்கும் அதற்கு ஆமாம் போட்ட நாத்தீக அரசியல்வாதிகளுக்கும் இதுவொன்றும் விசித்திரமானதொன்றல்ல!!!

ஆனால்;
தைப்பொங்கலை சைவசமயத்தவர்களிடம் இருந்து அந்நியப்படுத்தும்வகையில் இது மதசார்பற்ற விழா என்று பாண்டித்தியம் பேசும் அறிஞர்களின்(?) உள்நோக்கத்தினை சைவத்தமிழர் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்!

சைவசமயத்தையும் தமிழையும் பிரித்துப் பார்ப்பதென்பது உயிரையும் உடலையும் பிரிக்க எத்தனிப்பதற்கு நிகரானது!!! இருகண்களில் ஒருகண் மட்டுமே போதும் மனிதனுக்கு என்னும் மடமைக்கு நிகரானது!!!! சைவமும் தமிழும் ஒன்றோடு ஒன்று கலந்த பந்தத்தை உடையது!!!!

அரசியல் ஒருதலைமுறைக்கு சாப்பாடு போடும்!!! தமிழர்சால்பு பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது! அதை ஒருதலைமுறைச் சாப்பாட்டுக்காக சீர்குலைக்காதீர்!!!!

இருநிலனாய்த் தீயாகி நீருமாகி
இயமானனாயெறியுங் காற்றுமாகி
அருநிலைய திங்களாய் ஞாயிறாகி
ஆகாச மாயட்ட மூர்த்தியாகிப்
பெருநிலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறருருவும் தம்முருவுந் தாமேயாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே
பொழிப்புரை :பெரிய பூமியாகியும், நீராகியும், தீயாகியும், எறியும் காற்றாகியும், ஆகாயமாகியும், ஞாயிறாகியும், அழிவில்லாத நிலையையுடைய திங்களாகியும், இயமானனாகியும் இங்ஙனம் அட்ட மூர்த்தியாகியும், பெருமையுடையதாகிய நன்மையும், சிறுமை உடையதாகிய குற்றமும், பெண்ணும், ஆணும் ஏனைய தேவருடைய வடிவங்களும் அருவம், உருவம், அருவுருவம் என்னும் தம் மூவகைத் திருமேனிகளும் தாமே ஆகியும், நேற்று ஆகியும், இன்று ஆகியும், நாளை ஆகியும் நீண்ட செஞ்சடையுடைய எம்பெருமான் நின்றவாறு வியக்கத் தக்கதாகும்.

"இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாயெறியுங் காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாச மாயட்ட மூர்த்தியாகி"என்று அப்பர் பெருமான் அருளிய நின்ற திருத்தாண்டகத்தில் எம்பெருமானின் அட்டமூர்த்த வடிவங்கள் சிறப்பிக்கப்படுகின்றது.ஆக; சூரியதேவன் சிவபெருமானின் அட்டமூர்த்த வடிவமாமையால் தைப்பொங்கல் சைவநிகழ்வுகளில் முதன்மையான தொன்றாகும்.


பொங்கலோ பொங்கல்!!!!
தைத்திருநாள் வாழ்த்துகள்!!!!!

பேரூராதீனம் சீர்வளர்சீர் சாந்தலிங்கஇராமசாமிஅடிகளார் அவர்கள் உழவர்திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கிய அருளாசிச்செய்தி


குறிப்பு:- மின்னஞ்சல் ஊடாககிடைக்கபெற்ற சுவாமிகளின் வாழ்த்துச்செய்தியை இங்கு இணைந்துள்ளேன். திருமடத்தின் வலைப்பூவிலும்(http://peruradigalar.blogspot.com/2012/01/blog-post_13.html) இவற்றைக் காணலாம். நன்றி.
மேலும் படிக்க...

Sunday, January 1, 2012

திருவெம்பாவை முழுப்பாடலும் காணொளியில்

திருவெம்பாவை நோன்பு 30ம் திகதி ஆரம்பமாகியுள்ளது, வருகின்ற 8ம் திகதி ஆதிரை நாளில் முடிவுறுகின்றது. திருவெம்பாவை நோன்பை நோற்கும் சைவப்பெருமக்கள் கேட்டு மகிழும் பொருட்டு; திருவெம்பாவை முழுப்பாடலையும் யூடியூப்பில் இருந்து இங்கு இணைத்துள்ளேன். எல்லாம் திருவருட் சம்மதம்

திருவெம்பாவை பாடல் முழுவதையும் பொருளுரையுடனும் குறிப்புரையுடனும் படித்து மகிழுவதற்கு கீழுள்ள "திருவெம்பாவை பாடல்கள்" என்னும் இணைப்பை அழுத்துக. நன்றி
திருவெம்பாவை பாடல்கள்

திருவெம்பாவை,திருப்பள்ளியெழுச்சி என்பவற்றை தரவிறக்கம் செய்வதற்காக கீழுள்ள வலைத்தளங்களுக்கு செல்ல வேண்டுகிறேன். சைவமக்கள் யாவரும் பயன்பெறும் வண்ணம் ஏராளமான சைவசமய திருமுறைப் பாடல்களை தரவிறக்கம் செய்யும் வசதியுடன் இவ்வலைத்தளங்களில் இணைக்கப்பட்டுள்ளது. அருமையான ஒரு சிவப்பணி! ஈடு இணையற்ற சைவப்பெரும்பணி இது. சைவ உலகமே பயன்பெறும் வண்ணம் சிவப்பணியாற்றும் குறித்த வலைத்தள சைவ அன்பருக்கு எளியேனின் பணிவான நன்றிகள்.

மாணிக்கவாசகர் அருளிட்செய்த திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி , மார்கழி மாத உற்சவ பாடல்கள்

திருவெம்பாவை , திருப்பள்ளியெழுச்சி- மார்கழி உற்சவம்




எல்லாம் திருவருட் சம்மதம்
மேலும் படிக்க...