"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Monday, August 25, 2008

புராணங்கள் கட்டுக்கதையா? (சேது சேதுபடமொக்க சோகத்தை ஊட்டாதா?)

விஞ்ஞான ஆய்வுகள் என்னென்னவோ சொல்லுகின்றன. ஒருவர் உண்மை என்று நிறுவிக்கின்றார். இன்னொருவர் மறுக்கின்றார். குழப்பத்தில் சாதரண மக்கள்! விளைவு இதுதான் சந்தர்ப்பம் என்று எப்பம்விடத்துடிக்கும் அன்னிய சக்திகள் தமக்கு சாதகமாக மக்களின் குழப்பநிலையை பயனாக்குகின்றனர்.

அமெரிக்காவில் பிச்சைக்காரர்கள் கொள்ளைக்காரர்கள் மதுக்குடி மன்னர்கள் விவகாரத்துக் கோரும் தம்பதிகள் என்று கொட்டிக்கிடப்பது எங்கள் கிராமத்து ஏழைக்கு தெரியவர வாய்ப்பேயில்லை. எனவே இந்தசூழ்நிலையை தமக்கு சாதகமாக்கி "இங்கே பார் உன் வீட்டில் எவ்வளவு பிரச்சினை, அங்கு ஒரு பிரச்சினைகளும் இல்லை.அது சொர்க்கபுரி, இங்கே இருந்தால நரகந்தான் விளையும். " என்று தமது வாய்வண்ணத்தைக் காட்டுகின்றனர். பண வண்ணத்தோடுதான்!

இராமபாலம் உண்டு என்கின்றனர் ஒருசாரார். மிதக்கும் கல்லை காட்டுகின்றனர் அதாரமாக. இல்லை என்கின்றனர் மறுசாரார்.

"உண்டு என்று நம்பும் மக்களின் நம்பிக்கையில் ஏன் மண்ணள்ளிப்போட வேண்டுமென்று?" இன உணர்வாளர், இயக்குனர், நடிகர் விஜய ராஜேந்திரர் ஒரு பேட்டியில் குறிப்பிடுகின்றார்.






இதே கிருத்தவர்களோ இசுலாமியரோ உண்டு என்று நம்பியிருந்தால் விளைவு என்ன என்று சில பொதுசனம் முணுமுணுக்கின்றனர். இராமன் இருந்தானா இல்லையா என்பது தேவையற்றது என்னைப்பொருத்தவரையில்.



ஆனால் இதேபோல் நாளை திருவண்ணாமலை கோயிலை பெயார்த்தால்த்தான் பொருளாதாரவளர்ச்சி என்றநிலை தமிழகத்துக்கு வராமல் இருக்கவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.


புராணங்கள் பற்றி சைவருக்கு ஆறுமுகநாவலர் எடுத்துரைத்துள்ளார். எனவே இதுபற்றி குழம்பத்தேவையில்லை. சைவ வினாவிடையில் இதோ அவர் திருவாக்கு;



திருமுறைகளில் இடம் பெற்றுள்ள புராண வரலாறுகள் உண்மையாக நடைபெற்றவை தாமா?

திருமுறைகளில் இடம் பெற்றுள்ள புராண வரலாறுகள் இரண்டுவிதமாகப் பகுத்துப் புரிந்து கொள்ளவது வல்லது.
தத்துவ விளக்கங்களைக் கூறும் செய்திகள், அவற்றுள் ஒரு வகை மற்றொரு வகை உண்மையாக நடந்தவை. எடுத்துக்காட்டுக்காகச் சிலவற்றை இங்குக் காணலாம்.
சிவமகா புராணத்தில் ஒரு தலைப்பு எவ்வாறு சிறு சிவ புண்ணியம் செய்த கேடான நிலையில் இருந்தவனும் உய்வு பெற்றனன் எனக்கூறும். அதற்கு அடுத்த தலைப்பே எவ்வாறு ஒரு நல்ல சிவபக்தர் செய்த சிறு சிவ அபராததிற்காகப் பெற்ற கேடு குறித்துக் கூறும். இவை சிறிதளவேனும் சிவ புண்ணியம் செய்ய வேண்டும், செய்யும் பணியைக் கவனத்துடன் குற்றமின்றிச் செய்ய வேண்டும் என்னும் தத்துவங்களை உணர்த்த என்று கொள்ளாமல் உள்ளவாறே கொண்டால் குழப்பமே கிட்டும்.
இவ்வாறு புராண வரலாறுகளைப் பகுத்தறிந்து புரிந்து கொள்வதே நல்லது

"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு"

என்று வள்ளுவன் வலியுறுத்துவதும் இதையே. அதாவது எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் கேட்டவாறே கொள்ளாமல் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும். எனவே புராணங்கள் நடந்ததா இல்லையா என்பது தேவையற்ற விவாதம். அது சொல்லும் பொருளை அறிந்து வாழ்வியலை வளப்படுத்துவதே அறிவுடமையாகும்.

அவதானத்திற்கு:- இங்கு நாவலர் "திருமுறைகளில்" என்று வரையறுப்பதை மறக்கலாகாது. சிவாகமத்திற்கு ஒவ்வாதவைபற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் சேது சமுத்திர விடயத்தில் நாம் கொஞ்சம் கவனமெடுக்கவேண்டும். அது யாழ்ப்பாணத்திற்கு இதனால் கேடு விளையுமா இல்லையா என்பதிலேயே! யாழ் நீர்வளம் அழிவடையும், தீவுகள் மூழ்கலாம் என்றெல்லாம் கருத்துகள்.......ஆய்வறிக்கைகள் கூறிக்கொண்டுள்ளன. அடியேனும் சாதரண பொதுமகனாய் குழப்பத்தில்தான் உள்ளேன்.

கண் கெட்டபின் சூரியவணக்கம் போல் யாழ் நீர்வளத்தை இழந்தபின் எதுவும் செய்யமுடியாது. தமிழகம் கன்னடத்திடமும் கேரளத்திடமும் நீருக்காய் கைகட்டி நிற்பதுபோல் தயவு செய்து எங்களையும் எதிரிகளிடம் நீறுக்காய் கைகட்டி நிற்கவைத்திட வேண்டாம் என்பதுவே என் ஆதங்கவேண்டுகோள். வல்லுனர்களே சிந்தித்து செயற்படுக. பண முதலைக்கு மூளையை விலைவைத்து ஈழத்தமிழரை நீருக்கு நாதியற்ற இனமாக மாற்றாமல் இருந்தால் சரி.

மேலும் படிக்க...

Friday, August 22, 2008

பெரியாரும் விவேகானந்தரும்

சமீபத்தில் வலைப்பூ ஒன்றில் விவேகானந்தரை தூற்றி ராமசாமி முதலியார் ஆகிய பெரியாரின் எழுத்து பிரசுரிக்கப்பட்டிருந்தது. அப்போது என்னத்தை சொன்னாலும் பயனில்லை என்று விட்டுவிட்டேன். ஆனால் அண்மையில் என் உள்ள ஆதங்கத்தை அறிந்த எம்பெருமான் சிவபெருமான் திருவருளால் ஜீலை 2008 ஆடி என்று திகதி இடப்பட்ட ஸ்ரி ராமகிருஷ்ண் விஜயம் புத்தகத்தில் "திராவிட வேர்கள் வியந்த விவேகானந்தர்" என்ற தலைப்பில்அருமையான விளக்கக்கட்டுரை பிரசுரமாகியிருப்பது கண்டேன்.

சுவாமி விவேகானந்தரால் தமிழ்ச் சைவத்திற்கு தனிச் சிறப்பு பெரிதாக அமையாவிட்டாலும் , அவரால் மேற்கொள்ளப்பட்ட வேதநெறி மறுமலர்ச்சியை மறைப்பது தூற்றுவது சைவத்திற்கு அழகல்ல.
மிசனின் தொண்டையும் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

ஆனால் தனிப்பெரும் முதலாகிய தமிழரின் சிவ வழிபாட்டை பேணும் போது மிசனும் விவேகானந்தரும் சைவ உலகின் வாசலோடு சரி. அதை நினைவில் கவனமோடு கொள்ளவேண்டியது அவசியம். ஆறுமுகநாவலரின் மீள் பிரதிட்டை செய்யப்பட்ட சைவவழிபாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தாது மிசனையும் விவேகானந்தரையும் கருத்தில் எடுக்கவேண்டும்.

கொழும்பில் வளர்ந்த காலப்பகுதியில் கொழும்பு இராமகிருசுண மிசனின்( மடம்) ஆன்மீக தொடர்பை பேணும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன். எனினும் ராமகிருசுணரும் சாரதா அன்னையும் குருவாகக் கொண்டதோடு சரி. வாழ்கையில் அவர்களை ஆசான்களாய் ஏற்று அறிதல் சைவவாழ்வுக்கு குந்தகத்தை ஏற்படுத்தாது என்று கருதினேன். ஆனாலும் கடவுளாக காட்டுவதும், மட சுவாமிகள் திருநீறு அணிதலையே தவிர்க்கவிரும்புவதும் ஏற்க இயலாதவை. ராம வழிபாட்டையும் கிருசுணர் வழிபாட்டையும் சிறுவரிடம் தூண்டுவதும் மனதை சங்கடப்பட செய்பவை. எப்படி சாயிபாபா, அம்மா பகவான் என்று தனிப்பெரும் தமிழர் வழிபாடு ஆகிய சைவ வழிபாடு சிதைக்கப்படுகின்றதோ அதுபோல்த்தான் இராமகிருசுணமிசனின் சில நடைமுறைகளும் அமைந்துள்ளன.
இங்கு, ஈழச் சைவ சமூகம் விழிப்படைந்தால் தானாகவே இராமகிருசுண மிசன் ஈழத்தில் சைவ அனுகுமுறைக்குள் வந்துவிடும் என்று நம்புகிறேன்.சைவ வழிபாட்டை பேணும் தொண்டு நோக்குடைய துறவிகளின் நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்பு உருவானால் மிசனின் சைவ குந்தகக் கருத்துகள் தானாக மறைய வாய்ப்புண்டு.
இராமகிருசுண மிசனில் அவர்களுடைய கருத்துக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் வகையில் எதனையும் புகுத்த அனுமதிக்கமாட்டார்கள். ஆனால் ஆறுமுகநாவலரை வெறும் வாய்க்கு கூறிவிட்டு அவர் முதுகெலும்பையே உடைக்கும் சிலரின் செயற்பாடுகள்தான் சைவத்தின் மேன்மையை மங்கச்செய்யும் மிசனின் சில செயற்பாடுகளுக்கு காரணம் என்பதே என் கருத்து. பூசுவது திருநீறு இடிப்பது சிவன் கோயில் .......!!!



இன்ன இன்ன தேவையற்றது எங்கள் நாட்டில் என்று வரையறுத்திருந்தால் மடமும் உடன்பட்டிருக்கவேண்டியது நிர்பந்தமாயிருக்கும்.
ஆகவே திருநெறித் தமிழர்களே, உயர் சைவ வழிபாட்டை பேணுவோம். மறைநெறி வளர்த்தவர்களை ஆதரிப்போம். சைவ வீட்டில் சிவ தீட்சை அல்லாதோரை வாசலோடு நிறுத்திடுவோம். வாசலுக்கு வெளியே அவர்களின் மறை தொண்டு தூற்றப்படுவதை அனுமதியாது செயலாற்றுவோம்.
"வேத நெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க" என்று சிவத்தமிழ் வாழ்வை மேற்கொள்வோம்.

குறித்த அந்தக் கட்டுரையை இங்கு அப்படியே தருகின்றேன். வாசிக்க. தெளிவு பெறுக. பெரியார்(ராமசாமி) போற்றியதான பிரசுரம் இங்கு. பெரியார் தூற்றியதாய் பிரசுரம் அங்கு http://thamizhoviya.blogspot.com/2008/08/blog-post_19.html .
பெரியாரின் சாதி எதிர்ப்பு தோல்வி கண்டபோது மத எதிர்ப்பாகிகொண்டார். அதன் விளைவு போற்றியோர் எல்லோரையும் கண்ணை மூடிக்கொண்டு தூற்றினார்.
சாதி எதிர்ப்பிலேயே ஆழமாய் நின்றிருந்திருந்தால் ஒருவேளை தமிழகத்தில் சாதியையே இல்லாமல் செய்திருக்கலாம். ஆனால் மத எதிர்ப்பாக்கி அதில் சாதி எதிர்ப்பை இழகவிட்டுவிட்டார். விளைவு சாதியின் பேரில்தான் பள்ளிப்படிபென்று ஆகிவிட்டது. பார்ப்பனர் என்பது ஒரு சாதிக்கட்டமைப்பாக கண்ட பெரியார், தமிழரில் ஆயிரம் சாதிகள் இருப்பதை மறந்தது துன்பகரமானதே.



பெரியாரின் சாதி எதிர்ப்பை பார்ப்பனர் எனும் சிறு வட்டத்துகுள் நில்லாது ஒட்டுமொத்த சாதி எதிர்பாக வளர்த்து சாதியில்லா சமூகத்திற்காய் உழைப்போம். மத எதிர்ப்பு பெரியாரின் பிராமண எதிர்ப்பில் ஏற்பட்ட தோல்வியால் உருவானதென்று உணர்ந்து,சாதி இல்லா வேதநெறியை அவரின் புண்ணிய ஆன்மா மகிழ உருவாக்குவோம்.


இதோ குறித்த பிரசுரம் உங்கள் பார்வைக்கு



விவேகானந்தர் இல்லம் தொடர்பாக அண்மையில் எழுந்த பிரச்சினையைக் குறிப்பிட்டு சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர் பின்வரும் கருத்தை வெளியிட்டுள்ளார்.
"பகுத்தறிவு இயக்கத்தின் கருத்துகளை, பெரியார்,அண்ணா ஆகியோரின் கருத்துகளைப் பெரும்பகுதி எடுத்துக் கூறுபவர் விவேகானந்தர் என்கிற போது அவரிடம் நாங்கள் ஏன் விரோதம் கொள்ளவேண்டும்?"

சுவாமி விவேகானந்தரிடம் விரோதம் பாராட்ட வேண்டியதில்லை எனும் கருத்து வரவேற்கத்தக்கதே.ஆனால் பெரியார் மற்றும் அண்ணாவின் பெரும்பகுதி கருத்துகளை எடுத்துக் கூறுபவர் விவேகானந்தர் என்று தலைகீழாக மாற்றிக் கூறியது, காலக்கணிப்பு வழுவுடையது.
சுவாமிஜி சமூகச் சீர்திருத்தம் தொடர்பாக முன்மொழிந்த கருத்துகளை பெரியார்,அண்ணா அவரவர்கள் பாணியில் வழிமொழிந்தனர் என்பதே சரியானது.
திராவிட இயக்கத்தின் முன்னோடி இதழ்களுள் ஒன்றாகப் புகழ்பெற்ற "ஜஸ்டிஸ்" எனும் ஆங்கில நாளேடு சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக-சமுதாய ஆளுமையை பெரியார்-அண்ணாவிற்கு முன்பாகவே புனைந்துரையோ,பிறழ்ச்சியுரையோ இன்றி நட்புறவுடன் போற்றியுள்ளது.
26.2.1917-இல் சென்னையில் இருந்து "ஜஸ்டிஸ்" இதழ்வெளிவந்தது.அரசியல் பார்வையில் பாரதியார் "ஜஸ்டிஸ்" இதழை "ஸ்வதேச விரோதிகளின் முக்கியக் கருவி" என்று ஒருமுறை குறிப்பிட்டார். "ஜஸ்டிஸ்" இதழின் ஆசிரியராக ஆற்காடு ராமசாமி முதலியார் 1927-இல் பணியாற்றினார். புகழ் பூத்த அரசியல் தலைவராக அவர் ஆற்றியுள்ள பணி தனி ஆய்விற்கு உரியது. அவரும், லட்சுமணசாமி முதலியாரும் ஆற்காடு இரட்டையர்கள் என்று போற்றப்பட்டனர். இருவருமே சுவாமி விவேகானந்தரைப் போற்றி மகிழ்ந்தவர்கள்.
"ஜஸ்டிஸ்" இதழின் தலையங்கங்களில், சுவாமி விவேகானந்தரின் கட்டுரைகள்,உரைகளில் இருந்து மேற்கோள்களை எடுத்தாண்டதோடு,சரியான மதிப்பீடுகளையும் செய்தார்.
பிராமணிய எதிர்பானது, சமய எதிர்ப்பாக, ஆத்திக எதிர்ப்பாக மாற்றப்படாமல் இருந்த சூழலில் ராமசாமி முதலியாரின், பிராமணர் அல்லாதார் இயக்கப் பணி அமைந்தது.அவர் தம்மை தூய வைணவராக அடையாளம் காட்டிக் கொண்டவர்.
"புரோகிதத்துவ எதிர்ப்பு இயக்கம்", "காத்தியும் வர்ணாச்ரம தர்மமும்" எனும் இரண்டு தலையங்களை விரிவாக எடுத்தாண்டுள்ளார். அவரது சொற்றொடர்களைத் தன்மயமாக்கிக் கொண்டும் எழுதியுள்ளார்,ராமசாமி முதலியார்.
"வேதாந்தவிற்பனரான சுவாமி விவேகானந்தர், புரோகிதர் தலையீடுகளை உறுதியாகவும், நேர்மையாகவும் கண்டித்துள்ளார்" என்று தலையங்கம் குறிப்பிட்டுள்ளது.

இரண்டாவது தலையங்கத்தில் சுவாமிஜியின் "வேதாந்தமும் தனியுரிமையும்" எனும் அற்புதமான உரை(1896) மிகவிரிவாக எடுத்தாளப்பட்டுள்ளது. தனியுரிமையை எதிர்த்து போராட வேதாந்தம் உறுதுணையாக நிற்கின்றது என்பதை மிகத்தெளிவாக சுவாமிஜி விளக்கியுள்ளார்.
சுவாமிஜி , 1896-இல் லண்டனில் 'தனியுரிமை"எனும் தலைப்பில் நிகழ்த்திய உரை, ராமசாமி முதலியாரை ஆட்கொண்டது. இந்த உரையி ஒருபகுதியை தலையங்கத்தில் வழங்கிவிட்டு, ராமசாமி முதலியார் சுவாமி விவேகானந்தரை "ஜீவன் முக்தர்" என்று ஏற்றிப் போற்றியுள்ளார்.
"சுவாமிஜிவின் சொற்கள் உன்னதமான ஆன்மா எழுச்சியை தரவல்லன; புனிதன் மிக்க ஒரு ஜீவன் முக்தரின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்டச்சொற்கள்" என்று வர்ணித்தார்.
".......நீங்கள் உடல்பலமோ,அறிவுபலமோ அதிகமாகப் பெற்றுள்ளதால் என்னைவிட உங்களுக்கு உரிமை அதிகம் இருக்கக்கூடாது.பொருள் அதிகமாக இருப்பதால் நீங்கள் என்னைவிடப் பெரியவர் என்ற நினைப்பும் உங்களுக்கு வரக்கூடாது.ஏனெனில் இந்தப் பேதங்களையெல்லாம் கடந்து நமக்குள் ஓர் ஒருமை விள்ங்குகிறது.".சுவாமிஜியின் இந்த உரை தலையங்கத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சுவாமி விவேகானந்தரை அருமையான ஆங்கிலத்தில் பின்வருமாறு போற்றிப் புகழ்ந்துள்ளார் ராமசாமி முதலியார்.


Swami Vivekananda did not care if in his remarks he offended the sentiments and susceptiblities of any section of the people.He poured out his heart to them, told his audience in burning words of eloquence and true faith where they were lacking, showed them their weak points, refused to palliate the crimes against society committed by any section, and gave them lessions which must have gone home to their inmost hearts.

Yet there was no vulgar abuse, no ringing denunciations, no violent language. The grace of the savants, the sharpness of the zeolot, and the sincerity of one of the noblest souls in India combined to add to the divinity of his message.


"சுவாமி விவேகானந்தர், எங்கே தமது கருத்துகள் பிறரது உணர்ச்சியைப் புண்படுத்தி, குறைகளைச் சுட்டிக்காட்டிவிடுமோ என்று கவலைப்பட்டதில்லை.அனல் கக்கும் எழுச்சிமிகு சொற்களாலும், உண்மையான நம்பிக்கையுடனும் தன் உள்ளத்தைத் திறந்து காட்டி அவர்களின் குறை என்ன என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
"சமுதாயத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும்,தீமைகள் செய்தாலும் , சுவாமிஜி புகட்டிய பாடம் அவர்கள் நெஞ்சில் ஆழப் பதிந்தது.
"ஆனாலும், தரக்குறைவாகச் சாடுவதோ, வீண் கண்டனமோ, வன்சொல்லோ அவரிடம் அறவே இல்லை.ஞானிகளின் கருணை , ஆர்வம் உடையவரின் கூர்மை,இந்தியாவின் ஒரு உயரிய ஆன்மாவின் நேர்மை இவற்றுடன் தெய்விகமும் கலந்தது அல்லவா இவரது ஒவ்வொரு செய்தியும் ஆகும்!"
இவ்வாறு சொல்லொவியம் தீட்டினார் ராமசாமி முதலியார்.கல்விப் புரட்சி தொடர்பான மற்றும் சுவாமிஜியின் பாமர மக்கள் முன்னேற்றக் கருத்துகள் ராமசாமி முதலியாரைக் கவர்ந்தன.
தொடர்ந்து ஜஸ்டிஸ் ஆசிரியர் சுவாமிஜிக்குப் பின்வறுமாறு புகழ்மாலை சூட்டினார்.
"ஆற்றல் மிக்க அறிவினர், தூய்மையான சமூக சீர்திருத்தவாதி, புனித ஆத்மா,அவரது இயலபான பணியின் ஓர் அம்சமாக வாழ்வாதாரப் பிரச்சினைகளுடன் நேரடித் தொடர்பு கொண்டு மக்களினுடையே சமத்துவப் பாடங்களைப் போதித்தார்."
இவ்வாறு திராவிடப் பாரம்பரியத்தின் அடிவேர்களே விவேகானந்தரைக் கண்டு வியந்த வரலாற்றை எல்லோரும் அறிந்திட வேண்டும்.




பி.கு- திரும்பத்திரும்ப கேட்கிறேன்..............தயவுடன் வேண்டுகிறேன்..........பெரியாரின் அடிப்படை கொள்கையை நடைமுறைப் படுத்துவதே முதன்மையானது. அதை செயற்படுத்துங்கள்.

கவனத்திற்கு
எனது unicode எழுத்துமுறையில் உள்ள குறைபாட்டால் sri ஒலிக்குரிய சரியான கிரகந்த எழுத்தை எழுதமுடியவில்லை. அதனால் இராமகிருசுண மடத்தின் பெயரில் வரும் sriயை திருத்தமாக எழுதமுடியவில்லை. மன்னிக்க. ராமகிருஷ்ண என்பதை ராமகிருசுண என்றே எழுதியுள்ளேன். கிரகந்தத்தை இயன்றவரை தவிர்க்கும் பொருட்டு.
மேலும் படிக்க...

Monday, August 18, 2008

புராணத்தில் இருந்து காவடி பற்றியும் நந்தி பற்றியும்

முருகனுக்கு காவடி தோன்றிய கதை






அகத்தியர் பெருமான் கயிலையில் பூசித்த சிவகிரி, சக்திகிரி எனும் குன்றுகளை தென் திசைக்கு எடுத்துச்செல்ல விரும்பி தன்னுடைய சீடனான மிகவும் பலசாலியுமான இடும்பனை பணித்தார். இடும்பன் உடனே அவ்விரு குன்றுகளையும் பெயர்த்து காவுதடி ஒன்றில் அவற்றைக் கோர்த்து தன்னுடைய தோளிலே சுமந்தவாறு தென் திசையை நோக்கிப்புறப்பட்டான்.நீண்ட நடையால் களைப்புற்ற இடும்பன் சிறிதுநேரம் இளைப்பாற எண்ணி காவுதடியை இறக்கிவைத்தான். சற்றுநேரம் இளைப்பாறிய இடும்பன், மீண்டும் புறப்பட ஆய்த்தமாகி காவுதடியை மீண்டும் தூக்கமுயன்றபோது மலைகள் அசையவில்லை. காவுதடியும் மலைகளும் இம்மியளவும் அசையாததால் வெறுப்புற்று நின்றபோது அங்கு ஒரு சிறுவன் சிரித்துக் கொண்டு நிற்பதைக் கண்டான். இவன் தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று எண்ணி கோபங்கொண்டு போர் தொடுத்தான் அந்தச் சிறுவனோடு. போரின் இறுதியில் தோற்றுவீழ்ந்தான். இவற்றை அறிந்துகொண்ட அகத்தியர் உடனே விரைந்து வந்தார். வந்து நிற்கின்ற சிறுவன் முருகன் என்று உணர்ந்து வணங்கினார்.அன்று தொட்டு முருகனுக்கு காவுதடி தூக்கும் வழக்கம் உருவாயிற்று. காவுதடி காவடியாகவும் மருவிற்று.

நந்தி



சிலாதர் எனும் சிவனடியார் குழந்தைப்பேறு இல்லாமல் வருந்துவதால் வருந்திய இறைவன் பிளைப்பேறுக்கு வரம் அருளினார். அதன் பலனாக எட்டு வயது ஆயுளுடைய நந்தி பிறந்தார். தனது ஆயுளை அறிந்துகொண்ட நந்தி சிவபெருமானை நோக்கி தவமிருந்து கயிலைக்கு காவலனாகும் பேறடைந்தார்.உருத்திர கணங்களின் தலைவராகவும் இறைவனால் நியமிக்கப்பட்டார். இறைவனே முன்னின்று நடத்தும் திருமணப்பேறையும் பெற்றுக்கொண்டார். அதிகார நந்தி எனும் சிறப்புப்பெயருக்கு உரியவரானார்.
நந்தியின் வகைகள்
ஆகம விதிமுறைக்கமைந்த சிவாலயங்களில் இருக்கக்கூடிய அதிகூடிய நந்திகளின் எண்ணிக்கை ஐந்து என்று முன்னமே கூறியிருந்தேன்.அவைபற்றி இங்கு பார்ப்போம்.போக நந்தி,பிரம்ம நந்தி, ஆன்ம நந்தி, மால்(விடை)நந்தி,தரும நந்தி என்பனவே அவ்வைந்துமாகும்.

ஒருமுறை போகங்களின் பதியாகிய இந்திரன் சிவபெருமானுக்கு நந்தியாக வந்து வாகனமாக பக்திசெலுத்தினான். அதனால் அந்த நந்தியை போகநந்தி என்பர்.இதனை கோயிலுக்கு வெளியே காணலாம். இது போகங்களைத் துறந்து அதாவது ஆலயத்திற்கு வரும்போது சுக துக்கங்களைத் துறந்து வரும்படி குறித்துநிற்கின்றது.

பிரம்மதேவன் தனது படைக்கும் தொழிலை மேற்கொள்ளமுதல் சிவபெருமானிடம் சென்று உபதேசம் பெற்றார். அப்போது நந்தியாகமாறி இறைவனைத் தாங்கி நின்றார். இதனால் இந்த நந்தியை பிரம்மநந்தி என்பர்.பிரகார மண்டபத்தில் சுதையால் செதுக்கப்பட்டு காணப்படும்.

ஆன்மநந்தி என்பது கொடிமரத்துக்கு அருகில் மூலமூர்த்தியை நோக்கியவாறு காணப்படும். ஆன்மாக்கள் எல்லாவற்றிலும் இறைவனாகிய சிவபெருமான் நிறைந்துயிருப்பதால் ஆன்மாவின் வடிவமாக இது அமைக்கப்பட்டுள்ளது. இது பிரதோச காலபூசைக்குரியது.

மால் என்றால் திருமால்.விடை என்றால் நந்தி. திருமால் விடையாகமாறி சிவபெருமானை தாங்கியதால் இப்பெயர் உருவாயிற்று. திரிபுரங்களையும் எரிக்க சிவபெருமான் புறப்பட்டபோது இடையிலே இறைவனின் தேர் மண்ணுக்குள் புதைந்துவிட்டது. அப்போது திருவிளையாடல் நாயகனாகிய சிவபெருமானை கீழேவிழாது தாங்கிட திருமால் நந்தி(விடை)யாக மாறி சிவபெருமானை தாங்கி வாகனமாகி நின்றார். இவ்வாறு திருமால் நந்தியாக மாறிய நந்தியை மால்விடை என்பர். இதனை கொடிமரத்துக்கும் மகா மண்டபத்திற்கும் இடையில் காணலாம்.

கருவறையில் சிவலிங்கத்திற்கு அருகிலிருப்பது தருமநந்தி என அழைக்கப்படும். ஊழிகால இறுதியில் இறைவனாகிய சிவபெருமானிடத்தில் எல்லாமே ஒடுங்கிவிடும். தர்மத்தைத் தவிர. இந்த தர்மம் நந்தியாகமாறி இறைவனை தாங்கிநிற்கும்.


(என் கைகளை எட்டிய நூல்களிலிருந்து தொகுத்து எனது எழுத்து நடையில் தந்துள்ளேன்.)

மேலும் படிக்க...

Monday, August 11, 2008

ஈழ நாட்டிலே நல்லூரும் கத்திரகம ஆகிவிட்ட கதிர்காமமும்

இன்றைய ஈழ பண்பாட்டின் அடையாளம் நல்லூர் என்றால் அது மிகையாகாது. ஈழ வள நாட்டில் தொன்று தொட்டு வழிபடப்படும் வழிபாடுகளில் முருக வழிபாடு தனித்துவமான சிறப்பாக பின்பற்றப்படும் வழிபாடாகும்.அன்றைய கால மன்னர்களின் நாணயங்களில் வேல் குறியீடு காணப்படுவது முருக வழிபாடு எவ்வளவு மக்களோடு ஒன்றியிருந்தது என்பதை வெள்ளிடை மலையாய் நிருபணமாக்குகின்றது. ஈழத்தின் சமய சின்னமாக கதிர்காமம் அன்றைய காலங்களில் விளங்கியது எனலாம்."கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா " என்ற தேவராய சுவாமிகளுடைய கந்தர் சட்டி கவசமெனினும் அருணகிரிநாதரின் தெய்வீக திருப்புகழாகட்டும் கதிர்காமத்தின் புகழை தீட்டத்தவறவில்லை. ஏன் கமலகாசனின் தெனாலி திரைப்படத்தில் கண்டிக்கதிர்காமம் (இறுதிக்காலத்தில் கண்டி இராச்சியத்திற்கு உட்பட்டு இருந்தமையால் அவ்வாறு அழைக்கப்பட்டதாக அறியாமல் நான் வினாவியபோது ஒருவர் கூறியிருந்தார்.) என்று ஈழ சமய சின்னமாகக் காட்டப்பட்டது.அந்தளவு கதிர்காமப்புகழ் தமிழகம் எங்கும் ஈழ சமய சின்னமாக பிரபல்யம் அடைந்துள்ளது. ஆனால் வருத்தத்துடன் ஈழத்தமிழர்கள் ஏற்றுக்கொள்வது கதிர்காமம் ஈழ சமயச்சின்னத்தை இழந்துவிட்டது என்பதையேயாகும். இந்த உண்மை ஈழத்தை தவிர கதிர்காமத்தை ஈழ சமய சின்னமாக கருதும் தமிழகத்திற்கு தெரியாது. தெரிய வர அவர்களின் ஊடகங்களும் வழிசமைக்காது.யாழ்பாணத்தில் இருந்து யாத்திரிகர் கூட்டம் கூட்டமாக நடைபயின்று கதிர்காம விழாவிற்கு செல்லும் மரபு இன்று அருகிவிட்டது. மட்டக்களப்பில் இருந்து குறிப்பிடத்தக்க அளவு பக்தர்கள் நடையாக கதிர்காமம் சென்றாலும் சொற்பமே என்பது வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளவேண்டியுள்ளது. ஈழப்பிரச்சினை ஒரு காரணியாக இதற்கு அமைந்தாலும் ஈழப்பிரச்சினைக்கு வேராகவிருக்கும் சிங்கள ஆக்கிரமிப்பே காரணமெனலாம். கதிர்காமம் கத்திரகம என்று சிங்களமானது எப்படி என்று பாருங்கள்; முதலில் முருகனின் அருகில் சிங்கள புத்தர் வந்தார். (சிங்கள புத்தர் என்று அடைமொழி நான் இங்கு வழங்குவதற்கு காரணம் உண்மையான புத்தர் யுத்தத்தை எதிர்ப்பவர். அன்பின் வடிவம்.அரசாட்சியை துறந்தவர். ஆனால் இலங்கையில் அப்படியில்லை.பௌத்ததுறவிகள் அரசியலில் வாக்குகேட்டு பாராளுமன்றம் சென்றுள்ளனர்.யுத்தத்தை ஆதரிக்கின்றனர்.) பின்னர் ஆலய நிலத்தையே தனதாக்கினார். பின்னர் ஆலய நடுநாயகமாக மாறிவிட்டார். ஆரம்பத்தில் சிங்களர் முருகனை கும்பிட கதிர்காமம் வந்தனர். இன்று கதிர்காமம் வருவது புத்தரைக் கும்பிட என்ற நிலையாகிவிட்டது.முருகனைத் தேடவேண்டும் இன்று கதிர்காமத்தில். முருகன் கதிர்காமத்தில் "சப்"கடவுள் ஆகிவிட்டார். 1996இல் நான் முதன்முறை கதிர்காமம் செல்லும் வாய்ப்பு பெற்றேன். அப்போது மலையுச்சியில் நடுநாயகமாக முருகன் விளங்க, அண்மையில் ஒரு கட்டிடத்தில் பெரிய சிவலிங்கம் இருந்தது. அந்த சிவலிங்கம் முன் நின்று மௌனமாய் சில நிமிடம் தியானம் செய்து வரம் கேட்டால் பலிக்கும் என்பது நம்பிக்கையாக இருந்தது. அந்த கட்டிடத்தில் நுழைவதற்கு கட்டணம் வேறு அறவிடப்பட்டது. 1996இன் பின் பல தடவை கதிர்காமம் செல்லும் பாக்கியம் அமையப்பெற்றது. என் அம்மா இறைவன் விரும்பிவிட்டால் அடிக்கடி அவரே தானாக அழைப்பார் என்று நவின்றார். ஏன் என்றால் நான் சென்று பல தடவைகளின் பின்னர்தான் என் பெற்றோர் கதிர்காமம் செல்லும் பாக்கியம் பெற்றனர்.
மாணிக்கவாசகர் அழகாக இதனை சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார். "அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்று. அதாவது சிவபெருமானுடைய அருளால்தான் தான் அவருடைய திருவடிகளை வணங்கும் பாக்கியம் பெற்றேன் என்கின்றார். அதாவது விளக்கிச் சொன்னால் இறைவன் அருள் இருந்தால்தான் இறைவனையே வழிபடமுடியும். அடையமுடியும் என்பதாகும். புகழுக்கு சொல்லவில்லை. கதிர்காமம் செல்லும் பாக்கியம் அடிக்கடி என்னைத் தேடி தானே வரும்.அப்படி அடிக்கடி சென்றதால் அங்கு மெல்லமெல்ல நடந்த இன ஆக்கிரமிப்பை எளிதில் உணரக்கூடியதாக இருந்தது. நான் முதன்முறை செல்லும் போது உடைந்து சிதைவடைந்திருந்த நவக்கிரக சன்னதி 2005வரை அப்படியே தான் இருந்தது. மாற்றமேதும் இல்லை. ஆனால் முதல்முறை சென்றபோது மலையில் காணப்பட்ட சிவன் சன்னதி அகற்றப்பட்டு மிகப்பெரிய புத்தர் சன்னதி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த புத்தர் சன்னதிதான் மலை சிகரத்தில் ஆலய நடுநாயகமாக விளங்குகின்றது. அங்கு அண்மையில் நடப்பட்டிருந்த பெரியவேலும் தூரத்தே ஒரு மூலையில் அரக்கப்பட்டிருந்தது. பெரிய கதிர்காமம் கோவில் என்று அழைக்கப்படும் கோவிலில் 1996இல் சிறிய சன்னதியாக இருந்த புத்தர் 2005இல் நன்றாகவே வளர்ந்து ஆலய நடுநாயகமாய் மாறிவிட்டார். 1995இல் இருந்து 2005வரை( கடைசியாக நான் கதிர்காமம் செல்லும் பாக்கியம் பெற்ற ஆண்டு) வளர்ந்த.......புதிது புதிதாக முளைத்த புத்தர் அன்று தொட்டு 2005வரை( இன்று கூட இருக்கலாம்) சிதைவடைந்து கவனிப்பார் அற்று கைவிடப்பட்ட மலைசிகரத்தில் உள்ள நவக்கிரகங்களைப் பார்த்து முறுவல் பூப்பது அங்கு செல்லும் அனைவரும் உணரும் ஒன்று. இடையிடையே சின்னக் கதிர்காமம் என்று அழைக்கப்படும் மாணிக்ககங்கையோரத்தில் வீற்றிருக்கும் பிள்ளையார் புத்தபிக்குகளால் நீதிமன்றத்திற்கு செல்லவேண்டிய நிலையை ஏற்று கள்ளச்சிரிப்பொன்று பூப்பார். பெரிய கதிர்காமத்தில் தமிழில் இருக்கும் ஓம் என்ற அடையாயளத்தை அடிக்கடி அகற்றி பின் தமிழ் பாராளுமன்ற உருப்பினர்கள் விழவேண்டியோர் காலில் எல்லாம் விழுந்தபின் மீண்டும் மாட்டுவது அரசியல்.இவற்றால் ஏற்பட்டவிரக்தியால் கதிர்காமம் ஈழத்தமிழரின் மனதில் இருந்து மெதுவாக விலகத்தொடங்கி இன்று ஈழத்தவரின் சமய பண்பாட்டின் சின்னம் என்ற தகுதியை இழந்து நிற்கின்றது அருளுக்கு பஞ்சம் இல்லாக் கதிர்காமம். இவ்வாறு படிப்படியாக கதிர்காமம் தனது நிலையை இழக்க, ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தின் சமயச் சின்னங்களில் ஒன்றாய் காணப்பட்ட நல்லூர் படிப்படியாக யாழ் மக்கள் மனதுக்குள் ஒன்றி யாழ்ப்பாணம் என்றதும் நல்லூரே நினைவுக்கு மீளும்வகையில் யாழ்ப்பாண சமயப் பண்பாட்டின் சின்னமாகி கதிர்காமம் வகித்துவந்த ஈழ சமய சின்னம் என்கின்ற உரிமையை, புகழை எப்போது கதிர்காமம் இழக்கத்தொடங்கியதோ அப்போது முதல் நல்லூர் பெறத்தொடங்கி இன்று அந்த உரிமையை முழுமையாய்ப் பெற்றுவிட்டது எனலாம்.
பரமேசுவராக் கல்லூரி, இராமநாதன் கல்லூரி எனும் இரு உயர்ந்த தரம் மிக்க கல்லூரிகளை அழித்துத்தான் யாழ்.பல்கலைக்கழகத்தை தமிழருக்கு வழங்கியது அரசு. அதுபோல்த்தான் கதிர்காமம் என்கின்ற வரலாற்று புராண தலத்தை இழந்த துயரில் வளர்த்து எடுக்கப்பட்டதுதான் நல்லூர்............கதிர்காமத்தில் மழுங்கடிக்கப்பட்ட முருகன் நல்லூருக்கு செல்லுங்கள் என்று சொல்வதைப்புரிந்த கொண்ட தமிழன் கதிர்காமத்தை இழந்த துயரத்துடன் நல்லூரையே தனது சமய பண்பாட்டின் சின்னமாக மாற்றிவிட்டான்.
நான் இங்கு நல்லூர் திருவிழாக்காலத்தில் நல்லூரையும் கதிர்காமத்தையும் ஒப்பிட்டதன் நோக்கம் யாதெனில் இனியாவது கமலகாசனோ அன்றி யாரேனும் படமெடுத்தால் ஈழத்தமிழரின் உணர்வுகளையுணர்ந்து ஈழத்தமிழரின் சமய அடையாளத்தை காட்டும்போது நல்லூரின் பெயரைக் கொஞ்சம் சொல்லுங்கள் அல்லது கதிர்காமத்தை இழந்து துடிக்கும் ஈழத்தமிழனது உணர்வுகளைப் பிரதிபலியுங்கள் என்ற வேண்டுகோளை விடுக்கவே!



அப்படியே நல்லூரின் நினைவில் நான் கிறுக்கியதையும் பாருங்களேன்!


அழகே முருகா
தமிழே முருகா
சிவமே முருகா
அரோகரா முருகா
நல்லூர் குமரா

கதிர்காமமும் நீயே
உகந்தையும் நீயே
செல்வசந்நிதியும் நீயே
மண்டூரும் நீயே
மாவிட்டபுரமும் நீயே
என் நல்லூரா

ஆறுமுகம் கொண்டவனே
ஆறுபடை நாயகனே
அல்லல்கள் அறுப்பவனே
என் நல்லூரா

சேவல் கொடியுடையோனே
மயில் வாகனனே
சங்கம் ஆண்ட
சண்முகனே
என் நல்லூரா

வள்ளி தெய்வானை
மணவாளனே
வந்தோரின் வினையாவும்
விரட்டுகின்ற வேலவனே
என் நல்லூரா

ஈழ தமிழரசே
ஈழக் குரல்
கேட்கலையோ
இன்னல்கள் களைய
இன்னும் சித்தம்
பூணலையோ
இனிய செய்தி
தாராயோ
என் நல்லூரா!

http://mayasphotoblog.blogspot.com/
இல் (நல்லூர் என்னும் வகைப்படுத்தலுக்குள்) நல்லூர் மகோற்சவ புகைப்படங்களை கண்டு இறையானந்தம் அடையலாம்.


சிவத்தமிழோன்
மேலும் படிக்க...

Monday, August 4, 2008

பெரியாரும் தமிழர்நெறியும் (தமிழ் ஓவியாவிற்கு ஒரு விளக்கக்கட்டுரை)

(தமிழ் ஓவியாவின் வலைப்பூ:- http://thamizhoviya.blogspot.com/2008/08/blog-post_3663.htmlவின் வலைப்பூவில் சிவனும் உமையும் நீண்டநேரம் கூடியும் குழந்தை பிறக்காததால் சிவபெருமானின் விந்தை கொண்டு படைக்கப்பட்டதே முருகன் என்று வால்மீகியின் இராமாயணப் பாடலையும் கந்தபுராணத்தில் தன்னால் பிறக்கவில்லை என்று உமைவருந்துவதாகவும் ஆதலால் கந்தபுராணமும் அதை ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் பெரியார் கூறிய கருத்தாக வெளியிடப்பட்ட பிரசுரத்திற்கு எளியேன் வழங்கவிரும்பும் விளக்கம்.)

தமிழ் கடவுள் என்று தமிழ் சங்கம் கொண்டாடிய முருகனின் பிறப்பை பெரியாரின் எழுத்தைக்கொண்டு இழிவுபடுத்தியிருப்பது வருந்தவைக்கின்றது. தமிழ் ஓவியாவிற்கு விளக்கம் கொடுக்கவிரும்பி எளியேன் முயலுகின்கின்றேன். என்னை எழுதவைத்த எம்பெருமான் இந்தவிளக்கக்கட்டுரைக்கு துணையிருக்கட்டும். சைவசித்தாந்தமும் கந்தபுராணமும் கற்றோர் விளக்கக் கடிதம் எழுதி நேரத்தை வீணடிக்கார் என்பது இயல்பே! உனக்கு தெரிந்ததை எழுது என்று இள இரத்தம் என்னை எழுதத்தூண்டுகின்றது. கந்தபுராணப்படலம் ஆலயங்களில் பாமரருக்கும் விளங்கும் வகையில் படிக்க வழிசமைத்த நாவலரின் நாட்டில் பிறந்ததால் கந்தபுராணம் கற்றிராத வேளையிலும் தமிழ் ஓவியா அவர்கள் பெரியாரின் எழுத்தாக குறிப்பிட்ட கந்தபுராண வசனவரிமூலமே விடையளிக்க முடியும் என நம்புகின்றேன்.
தமிழ் கடவுள் என்று சங்கம் கொண்டாடிய முருகனையும் திராவிடவழிபாடே சைவவழிபாடு என்று அகழ்வாராய்வுகள் விளக்கி மொகஞ்சதரோ, கரப்பா நாகரிகம் (சிந்துவெளி நாகரிகம்) தமிழர் பண்பாடு என்று வடக்கின் தலையில் குட்டிச் சொல்லிருக்கும் வேளையில் சிவனை இழிவுபடுத்தும் வகையில் பெரியாரின் எழுத்தை பிரசுரித்து பிரபல்யம் தேடுவது ஆரோக்கியம் அன்று. பெரியாரின் திராவிடப் பாசறையை பல நூல்கள் வாயிலாய் அறிந்து அவரோடு ஈர்க்கப்பட்டவன் நான். பெரியார் சாதிக்கொடுமைகளை எதிர்த்தார். சாதிகளின் வேர் பார்ப்பனர் என்பதால் அவர்களையும் எதிர்க்கவேண்டிய நிலைக்கு உள்ளானார். ஆனால் அவர் நூறுவீதம் சரியான கொள்கைகளையே கொண்டிருந்தார் என்றால் மனித இயல்புக்கு அப்பாற்பட்டவர் என்றுதான் அர்த்தம்.ஆரம்ப காலகட்டத்தில் ராஜாஜியுடன் இருந்த நட்பின் நிமித்தம் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து பின்னர் அது தவறு என்று அதில் இருந்து மீண்டவர் பெரியார். தனது முதுமைவயதில் மறுமணம் செய்து கொண்டபோது அதன் காரணமாக கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்ததாக ஆனந்தவிகடன் "நாயகன்" தொடர்மூலம் அறிந்துகொண்டேன்.தனது கொள்கைகளை தனக்குப்பின் கட்சியில் பேணுவதற்குத்தான் மறுதிருமணம் பெரியார் செய்ததாக விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. நேருவும் காந்தியும் மறுதிருமணமா செய்திருந்தனர் கொள்கைகளைக் காப்பாற்றுவதற்கு? கட்சிக்கொள்கைகளைக் காப்பற்ற முதிர்ந்த தலைவர்களை திருமணம் செய்ய அறிவுறுத்துகின்றாரா பெரியார்? பெரியாரை கடவுளாகக் காண்பவர்களுக்குத்தான் அவர் நூறுவீதம் சரியானவர். மனிதராய் அவரை நோக்கினால் அவரின் கருத்துக்கள் பிழையாக இருக்கவும் வாய்ப்புண்டு என்பது விளங்கிக்கொள்ள முடியும். யேசுநதர் சொல்லவில்லையா உலகம் தோன்றி ஐயாயிரம் வருடம் என்று? (விஞ்ஞானம் அவரைப் பார்த்து சிரிக்கின்றது இன்று.)யேசுநாதர் தன்னை வழிபடாதவர்கள் பாவிகள் என்றும் நபிகள் உருவ வழிபாட்டை சிதையென்றும் சொன்னதாக அந்தந்த மதநூல்கள் சொல்வது போல் என்ன குறையை கண்டீர் "அன்பே சிவம்""ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற தமிழரின் சைவத்தில்? ( சைவத்தில் வடக்கு கலப்புகள் எமக்கு பாதகமாய் இருப்பின் புறக்கணிப்போம். நல்லவற்றைக் காப்போம். நல்லன எல்லாவறையும் தமிழுக்கு மொழிபெயர்த்து கொண்டுவரச் சொல்லவில்லையா பாரதி?) பெரியாரின் கருத்துக்கள் நூறுவீதம் சரியானதே என்று வாதடின் அவர் கடவுள் ஆகிவிடுவார் கவனம்......கடவுள் கொள்கை எதிர்ப்பாளர்களே! கடவுள் இல்லை என்பதும் கடவுள் இருப்பது என்பதும் அவரவர் நம்பிக்கை. பெரியாரின் நம்பிக்கை கடவுள் இல்லை என்பது. அதில் குறைகாண யாராலும் (கடவுளால் கூட) முடியாது. ஆனால் புத்தர் இந்தியாவில் பிறக்கவில்லை அமெரிக்காவில் பிறந்தார் என்று கூறியிருந்தால் அதை ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைகூட மறுத்துவிடும். கடவுள் இல்லை என்ற ஒரே நோக்கத்தில் கந்தபுராணத்தை வாசித்ததன் விளைவு அதன் பொருள் அவருடைய சிந்தைக்கு எட்டாமல் போயிருக்கலாம்.( இல்லை, அவருக்கு நன்கு விளங்கியிருக்கும். பெரியாரை எதிர்ப்பவன் தான் நான்.அதனால் அவர்மீது கறைபூச முயலுகின்றேன் என்று தாங்கள் கருதின், பகுத்தறிவு கொண்டு சிந்தியுங்கள் பெரியார் ஒரு மனிதரே ஒழிய கடவுள் அல்லர். எனவே பிழையான முடிவுகள் கொள்ளவாய்ப்புண்டு என்பதை.) பெரியார் நூறுவீதம் சரியாகவே செயற்பட்டார், அவர் நவின்றது யாவும் சரியானதே, கடவுள் கொள்கையாளர்களின் கடவுள் மட்டும்தானா நூறுவீதம் சரியாக இருப்பார், எங்கள் பெரியாரும் நூறுவீதம் சரியே என்று கருதின் தர்க்கவாத அடிப்படையில் பெரியார் கடவுள் ஆகி பெரியாரின் கடவுள் இல்லை என்ற கொள்கையையே கொலைசெய்துவிடுவார்.வடக்கின் பண்பாடு வேறு. தமிழரின் பண்பாடு வேறு. அதனால்த்தான் கம்பன் வால்மிகியின் இராமாயணத்தை தமிழில் பலமாற்றங்களுடன் எழுதினான். சீதையின் கைகளைப்பற்றியிழுத்து இராவணன் கடத்திச்சென்றதாக வால்மிகி எழுதியிருக்க சீதைமீது இராவணனின் கைகள் படவில்லை, நிலத்தோடு சேர்த்தே சீதையை கடத்தியதாக கம்பனும் எழுதியுள்ளான். இங்கு இராமாயணம் உருவானதே தமிழரை கேவலப்படுத்த என்பதனால் பெரியாரே இராமாயணத்தை எதிர்த்திருந்தார் என்பதை கவனிக்க. எனவே நிச்சயமாக தமிழரின் வழிபாட்டுமுறையான சிவ வழிபாட்டை இராமாயணம் கேவலப்படுத்த தயங்காது. அதிலும் வடக்கரான வால்மிகியின் எழுத்துக்கள் எப்படி தமிழர் வழிபாட்டை ஆதரித்து இருக்கும் என எதிர்பார்க்கமுடியும்? வால்மிகி சிவவழிபாட்டை கேவலப்படுத்தவேண்டும் என்ற சிந்தையில் எழுதாது தான்சார்ந்த பண்பாட்டில் அது தவறாக தெரியாததால் அவ்வாறு எழுதயிருக்கவும் வாய்ப்புண்டு.எனவே தமிழ் வழிபாட்டை வடக்கரின் நூல் கொண்டு சிதைக்க நினைப்பது எவ்வகையிலும் நியாயப்படுத்தமுடியாது. கந்தபுராணத்தில் உமை தன்மூலம் முருகன் பிறக்கவில்லை என்று வருந்துவது சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் பிறந்துவிட்டதே என்ற ஆதங்கத்தில் இருக்கலாம். வால்மிகியின் படி கூடலில் நீண்டநேரம் ஈடுபட்டும் குழந்தை பிறக்கவில்லையே என்ற ஆதங்கத்திலும் கூட இருக்கலாம். ஆனால் கந்தபுராணத்தில் நெற்றிக்கண் மூலம்தான் முருகன் பிறந்தான் என்று திட்டவட்டமாக குறிப்பிட்டு இருக்க வால்மிகியின் கதையை இதற்குள் கொண்டுவந்து புகுத்துவது படித்தவர்களுக்கு அழகு ஆகாது.

இந்து என்னும் சொல் பாரசீகர் பாரதத்தவர்களை திருடர் என்று குறிப்பிட பயன்படுத்திய சொல். இந்து இந்தியா ஆனது. ஆகவே இந்தியர் என்றால் கள்ளர் என்று பொருள் கொள்ளமுடியுமா? பொருள் கொண்டால் அது எவ்வளவு பெரிய தவறாகிவிடும். எங்கள் தமிழில் புக்கை என்றால் உணவுப்பண்டத்தைக்குறிக்கும். சிங்களத்தில் நிதம்பத்தை குறிக்கும். நான் விருந்தினராக தமிழர் வீட்டுக்கு சென்று அங்கு உங்கள் புக்கையின்று வாய்க்கவில்லை என்று கூற அதற்கு அவர்கள் சிங்களத்தில் "புக்கை" என்ற சொல்லின் பொருளைக் கொள்ளமுடியுமா? அப்படிக் கொண்டுவிட்டால் எவ்வளவு பெரிய ஒழுக்கக்குறைவு ஏற்பட்டுவிடும் எனக்கு!

இதற்குமேல் இதுபற்றி பெரியாரை விமர்சிப்பது அவர்மேல் நான் கொண்டிருக்கும் பற்று "கூடாது" என்று தடுக்கின்றது. என் எழுத்து சாதியற்ற சைவத்திற்குகாய் உழைக்கவிரும்புகின்றது. அதலால் பெரியார்மீதும் விசுவாசம் உள்ளது. தாயில் குறைதேடின் தாயின் பாசம் விளங்காமல் போய்விடும்.திருமந்திரமும் "ஆதிபகவன் முதற்றேயுலகு" என்ற திருக்குறளும் தமிழரின் சொத்துக்கள். சோழன் கட்டிய தஞ்சை கோயில் ஒக்க ஒரு கட்டிடத்தை இன்றுவரை தமிழனால்( வேறு எவராலும் கூட)கட்ட முடியவில்லை. திருவாசகத்தின் முன் விஞ்ஞானம் மெய்சிலிர்த்து நிற்கின்றது. திருமந்திரம் திருக்குறள் ஒக்க ஒருநூலேனும் படைக்க இன்றைய தமிழனால் முடியவில்லை.இது இப்படியிருக்க,அந்த வியப்புக்குரிய முன்னோர்கள் காத்த சைவத்தை சாதியை ஆதரிக்கும் வேதத்தை பொதுநூலாய் கொண்டது என்ற ஒரே காரணத்துக்காக சிதைக்க எப்படித்தான் மனம் விரும்பிற்றோ? . வேதத்தில் உள்ள எல்லாவற்றையும் கடைப்பிடிக்கவேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. சிவ வழிபாட்டை ஏளனம் செய்யும்(தமிழர் வழிபாடு ஆதல்லால்) வேதப்பகுதிகள் கூட உண்டு. அவற்றை சைவம் புறக்கணித்துத்தான் பொதுநூலாக வேதத்தை ஏற்றுள்ளது. ஆதலால் சாதியை வேதத்தில் புறக்கணிப்பது இயலாத ஒன்று அல்ல. ஒன்றே குலம் என்ற திருமந்திரமே சைவம்.பாரதி ஈழத்திருநாட்டை சிங்களத்தீவு என்று பாடி வரலாற்றுத்தவறுவிட்டுவிட்டான். ஆனால் பாரதியையும் அவருடைய பாடல்களையும் பாலர் பள்ளி தொட்டு பல்கலைக்கழகம் வரை புகட்டுவதுதான் ஈழத்தமிழ்கல்விமுறை. எங்களுக்குத்தெரியும் பாரதி ஒரு மனிதன். பிழைவிடுவது தவிர்க்கமுடியாதது. அவர் திருமந்திரம் சிவபூமி( சிவபூமி என்றால் தமிழர்பூமி என்பதற்கு விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்று நம்புகின்றேன்.) என்று கூறியிருக்க சிங்களத்தீவு என்று பாடியது எவ்வளவு பிழை என்பதை நான் சொல்லி யாரும் அறியவேண்டிய நிலையில் இருக்கமாட்டார்கள் என்று நம்புகின்றேன். ஆனால் அவர் விட்ட ஒருபிழைக்காக அவருடைய தமிழ்ப்பற்றையும் சாதி எதிர்ப்பையும் அவருடைய தமிழ் பாடல்களையும் புறக்கணிப்பது எங்களுக்குத்தான் நட்டத்தை விளைவிக்கும். பாரதியாருக்கு அல்ல. அதேபோல் பெரியார் பார்ப்பனர் சாதியை கையில் தூக்கிபிடித்திருந்தகாரணத்தால் அவர்களை எதிர்க்கவெளிக்கிட்டு அது மதஎதிர்ப்பாகி அந்தமதஎதிர்ப்பு சிலதவறான கருத்துள்ள அவருடைய எழுத்துக்களுக்கு வித்திட்டுவிட்டது என்று உணரும் திறன் என்னிடம் உண்டு. பெரியார் கடவுள் அல்ல. மனிதர் என்பதிலும் நான் உறுதியாகவேயுள்ளேன். பெரியார் தொண்டர்களும் அவரை அப்படி நோக்குவதுதான் பெரியாருக்கு அழகு சேர்க்கும் முறையாகும். எனவே அவர்காட்டிய நல்லகருத்துக்களை பரப்புவோம். சாதியில்லா சமூகவிடுதலைக்கு போராடுவோம்.பெரியார் பார்ப்பனரைத்தான் சாதியின் வேர் என்று கருதினார். ஆனால் இன்று அவர்கள் அல்ல வேர். பள்ளி அனுமதிப்பத்திரத்தில் சாதிப்பெயர் குறிப்பிடப்படவேண்டியள்ளதே அதுதான் வேர். நாயுடு, செட்டியார், கள்ளர், வெள்ளாளர், பறையர்..............என்பதெல்லாம் பார்ப்பனர் வைத்தசாதிகள் அல்ல. அது தமிழர் தமிழருக்குள் படைத்ததுதான். பார்ப்பன எதிர்ப்பு சாதிக்கொடுமையை தீர்க்கமாட்டாது என்பதையும் உணர்க. எங்கள் வன்னியில் சாதி பெயரைச்சொல்ல எவருக்கும் துணிவுயில்லை. அங்கு தமிழாட்சி நடக்கின்றது. அங்கு இயற்றப்பட்டுள்ள சட்டம் சாதி என்ற சொல்லை வீட்டுக்குள் பூட்டிவைத்துவிட்டது. நாளை அப்படிஎன்றால் என்ன என்று கேட்கும் சமூகம் மலரத்தான் உள்ளது.தமிழ்நாட்டை தமிழன் தானே ஆளுகின்றான். வடக்கரா ஆளுகின்றனர்? சட்டமியற்றச்சொல்லுங்கள். பெரியார்பாசறை பிள்ளைகள் தானே நாடாளுகின்றனர்? சாதியை பள்ளி அனுமதிபத்திரத்தில் தடைசெய்யகோரி அவர்களை எதிர்த்து ஒரு உண்ணாவிரதப்போராட்டம் நடத்துங்கள். பெரியார் பெயரை அதற்கு உபயோகியுங்கள். அதைவிட்டுவிட்டு பெரியார் தொண்டார் என்றுகாட்டிக்கொள்ள உங்கள் உயிருக்கும் உடமைகளுக்கும் எழுத்துக்கும் சேதத்தைவிளைவிக்காத பார்ப்பன எதிர்ப்பையும் மதஎதிரிப்பெனும் பெயரில் உயர்ந்த தமிழரின் வழிபாட்டுமுறைகளையும் கேவலப்படுத்தல் என்ற இரண்டையும்தான் பயன்படுத்தும் செயல்வீரர்களையா நீங்கள்? பெரியாரின் மதஎதிர்ப்பு சாதிஎதிர்ப்பால் உருவானதென்பதை மறந்து மத எதிர்ப்பு என்று மதஎதிர்ப்பு என்று பெரியார்வேடதாரிகளிடம் சைவசித்தாந்தம் கற்றோரும் திருமுறை வித்தகர்களும் கந்தபுராண பாராயண சான்றோர்களும் கருத்துப்பரிமாற வரவாய்ப்பேயில்லை.

"கல்லாத மூடரை காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்க்கக் கடன் அன்று
கல்லாதமூடருக்கு கல்லாதார் நல்லராம்
கல்லாதமூடர் கருத்தறியாரே"
(திருமந்திரம்)

மேலும் இவ்வாறான சமயநெறிமூலம் ஒழுக்கக்குறைவு எற்படுமென்று பெரியாரின் எழுதாய் எழுதப்பட்டிருந்தது. ஒழுக்கக்குறைவாய் பெரியார் குறிப்பிட்டதற்கும் சைவநெறிக்கும் இம்மியளவும் தொடர்பில்லை என்பது வெள்ளிடை மலையாய் யாவரும் அறிவர். அனால் பெரியார் தொண்டர் என்னும் சத்தியராஜ் (ராஜ் என்று "ஜ்" என்னும் வடசொல் வருவதால் ராசா என்று மாற்றச்சொல்லுங்கள் அவரிடம்) கர்நாடக எதிர்ப்புமேடையில் பேசியதை சக தமிழ்பற்றாளர்கள் கூட ஏற்க்கமறுக்கின்றார்கள். சத்தியராச்சின் மேடையொழுக்கம் பெரியார் பாசறையின் ஒழுக்கம் என்று யாரேனும் பொருள்கொள்ளமுடியுமா? . சத்தியராஜ் என்னும் தனிமனிதர் அளவுகடந்த கோபத்தில்(நியாயமானது தான்) தன்னைக்கட்டுப்படுத்த தவறியதற்கு பெரியாரை பிழைபிடிப்பது முட்டாள் தனமான ஒன்று. சத்தியராஜ் தன்னுடைய பேச்சில் தமிழ்கடவுள் முருகனை கும்பிடு கடவுள் தேவை என்றால் என்று குறிப்பிட்டுள்ளார். இப்பொழுது பெரியார் அவரைக் கோபித்துக்கொள்ளமாட்டாரா? சத்தியராஜ்சுக்கு விளங்கியிருக்கின்றது பெரியார் ஒரு மனிதர்.அவருடைய எல்லா எழுத்துக்களும் சரியென்று கூறமுடியாது என்று. தமிழ் ஒவியாவிற்கு இனிவிளங்கும் என்று நம்புகின்றேன்.
( கரே ராமா கரே கிருசுணா இயக்கம் இரசியாவில் வெள்ளைக்கார இரசியர்களுக்கு பூணூல் வழங்கி பார்ப்பனராய்யுருவாக்கியுள்ளது. ஆதலால் ஏன் அன்றைய சமயபூசாரிகளாக இருந்த தமிழர்களை இவ்வாறு பார்ப்பனராக்கியிருக்க மாட்டார்கள் என்று ஐயம் என்னுள் முளைவிட்டுள்ளது. சான்றோரே சிந்திக்க.)
மேலும் படிக்க...