"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Saturday, December 29, 2012

ஆன்மாக்கள் எப்போது தோன்றின? சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 9

நீண்டகால இடைவெளியின் பின்னர்,மீண்டும் சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பகுதியை தொடர்ந்து எழுத எல்லாம் வல்ல சிவப்பரம்பொருளின் திருவருட்சம்மதம் வாய்க்கப்பெற்றுள்ளது.

இறை தத்துவத்தை, அது விஞ்ஞானத்தை விஞ்சிநிற்கும் அருமையை ஆன்மாவுடனாக இறைவனின் தொடர்பை முன்னைய பகுதிகளில் பார்த்தோம்!
அத்வைதம் என்னும் சொல்லுக்கு சங்கரர் கண்டது பிழையான பொருளென்றும் நம் சித்தாந்திகள் கண்டதே சாலச்சிறந்த பொருள் என்றும் பகுத்தறிந்தோம்.
முன்னைய பகுதிகள் :- சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 1
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 2
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 3
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 4
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 5
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 6
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 7
சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 8 

இனி, ஆன்மாவின் தன்மைபற்றி சைவசித்தாந்தம் என்ன கூறுகின்றதென்று பார்ப்போம்!
ஆன்மாக்கள் எத்தனை?

எண்ணற்றன! இதுதான் சைவசித்தாந்தம் சொல்லும் பதில்! பூமியில் செடி
,கொடி தொட்டு மனிதன் ஈறாய் எத்தனை உயிர்கள் உண்டென்று கணக்கெடுக்க முடியுமா?  பூமியில் உள்ளவற்றையே  கணக்கெடுக்க முடியவில்லையென்றால்...........மொத்த ஆன்மாக்களின் எண்ணிக்கையை சிந்தித்துப் பார்க்கத்தான் முடியுமா? முடியாது! அதனால்த்தான் எண்ணற்றன என்கின்றது சைவசித்தாந்தம்!

ஆன்மாக்கள் எப்போது உருவாகின?
ஆகா; ருமையான கேள்வி! ஏன் உருவாகின, எங்கிருந்து உருவாகின என்ற கேள்விகள்கூட மனதில் எழலாம். எனவே அத்தகைய கேள்விகளே எழுவதற்கு வாய்ப்பில்லாத அருமையான விடையை சைவசித்தாந்தம் பகருகின்றது.ஆன்மாக்களும் சிவனைப் போல் அநாதியே! இதுதான் சைவசித்தாந்தம் பகரும் அருமையான பதில்!

"சுடரொளியாய் என்றுமுள்ள அன்றளவும் யானும் உளன்" - உமாபதி சிவாச்சாரியார்

அநாதிக்காலம் என்றால் அது எக்காலம்?
ஆன்மாக்கள் பூமிக்கு வந்த பிற்பாடே காலத்தத்துவத்துக்குள் அகப்பட்டுக்கொள்கின்றன. ஆக; பஞ்சபூதங்களாலான, இவ்வுலகிற்கு வருவதற்கு முன்னர் காலம் என்னும் தத்துவத்தில் அவர்கள் இருந்திலர்.

ஒரு பிறந்த மனிதனுக்கே, குழந்தைப்பருவம் என்று தொடங்கி, மூப்பு வந்து காலத்தை உணர்த்துகின்றது. எனவே, காலம் என்பது சடப்பொருட்களால்; அதாவது ஐம்பூதங்களால் உருவாக்கப்பட்ட இந்த உடம்பைப் பெற்றபின்னர் சடப்பொருட்களில்(ஐம்பூதங்களில்) நடைபெறும் மாற்றங்களைக் கொண்டு உணரும் ஒரு தத்துவம்!
எனவே, அநாதிக்காலம் என்றால் அது எக்காலம்? என்று சிந்திப்பது முரண்.

காலமே இல்லாத இயல்பில் உள்ள ஆன்மாவுக்கு காலத்தை ஏற்றிக் கதைப்பதும் பாலுக்கு உறைப்பு எக்காலத்திலிருந்து உண்டு என்று ஆராய்வதும் ஒன்றுதான்.

ஆன்மாவை இன்னும் விரிவாக அடுத்தடுத்த பகுதிகளில் அலசுவோம்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 comments: on "ஆன்மாக்கள் எப்போது தோன்றின? சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 9"

ANGOOR said...

நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களின் வகுப்பு .......மிக்க அருமை ....தொடருந்து எழுதவும்

சிவத்தமிழோன் said...

எல்லாம் எம்பெருமானின் திருவருட்சம்மதம்தான்!

நமச்சிவாய வாழ்க said...

சிறுவர் சிவஞானம் நூல் உங்களுக்கு மின்அஞ்சல் வழியாக அனுப்பிவைக்கிறேன்.தங்களது பதிவிற்கு அந்நூல் பயன்படும் என நினைக்கிறேன்.
அன்புடன்
சீனிவாசன்

Post a Comment