கடற் கன்னிகளின் தமிழிசையால் அழகான ஈழமணி நாட்டை அழகுபடுத்தும் மட்டக்களப்பு மாநகரிலே அண்மையில் நடந்த திருமால் ஆலய சங்காபிடேகத்தின் இறுதியில் பிரசங்கம் நடைபெற்றது. ஆலயந் தோறும் பிரசங்கம் நடைபெறல் வேண்டும் என்ற நாவலர் பெருமானின் ஆவலை சில ஆலயங்களே சிறப்பாகக் கையாளுகின்றன. இவ்வாலயத்திலும் அவ்வாறு நடைபெற்ற பிரசங்கத்திலே சங்காபிடேகம் செய்வித்த பிரதமகுருக்கள் தமிழின விரோத விதைகளை மக்கள் மத்தியில் பதியவைக்க முயன்றவேளை தன்னையறியாமலேயே தனது உட்கிடக்கையை வெளிப்படுத்திவிட்டார். பாவம் ஓளி ஒலிப்பதிவு வலைப்பூ ஏறும்.......தமிழரை தமிழ் பற்றாளர்களாக வாழும் தமிழ் பிரமணர்களை சிந்திக்கவைக்கும் என்று அவர் எண்ணியிருக்க வாய்ப்பில்லை. இங்கே அடியேன் குறித்த ஒளி ஒலிப்பதிவை இணைத்துள்ளேன் YOUTUBEமூலமாக. PLAYபண்ணி சிறிது நேரம் பொறுத்திருந்து BUFFERING ஆகவிட்டு ஒலி ஒளிப்பதிவை அவதானியுங்கள்
4 comments: on "நெறிதவறும் பிராமணரும் ஈழத்தில் சைவத்தை சிதைக்கும் வடநாடும்"
'அலிகளில் சங்கம்'
தயவு செய்து இச்சங்கத்தை 'திரு நங்கைகள் சங்கம்' எனக் குறிப்பிட்டு அவர்களை அரவணைக்கவும்.
பதிவுச் செய்தி பார்த்து ஆச்சரியமாக இருந்தது.
சங்கரமடம் ஈழத்து அந்தணர் மேல் என்றும் அக்கறை காட்டுவதில்லை.
யாழில் இராணுவம் இவர்களில் பலரைச் சுட்டுக் கொன்ற போதும்
மௌனமாகவே இருந்தது.
அன்புடன் யோகன் பாரிஸ்க்கு,
தங்களின் நியாயமான சமூக அக்கறைகொண்ட வேண்டுகோளை எளியேன் நிறைவேற்றிவிட்டேன். ஆம், திரு நங்கையர் சங்கம் என்று மாற்றிவிட்டேன். சமூக அக்கறையோடு எடுத்துக்காட்டியமைக்கு நன்றிகள்.
பார்ப்பனருக்கு தமிழ் பற்றிய அக்கறையில்லை. தமிழகத்தில் தமிழ் தேவாரத்திற்கு தடைகொண்டுவர முயன்றவர்கள்தான் பார்ப்பனர். அவர்களை பெரியார் வழியில் கையாளவேண்டும்.
ஐயா அனோனிமுசு, தாங்கள் சொல்வது ஓரளவு சரிதான். ஆனால் சூரிய நாராயண சாத்திரிகள் தனது பெயரை பரிதிமால் கலைஞர் என்று தமிழாக மொழிமாற்றி பயன்படுத்தினார். அவர் தமிழ் பார்ப்பனர் என்றால் தங்களால் மறுக்கமுடியுமா? தமிழைக் காதலிப்பவர் தமிழர். தமிழைக் காதலிக்கும்போது இயல்பாகவே தமிழ் நெறியான சைவத்தவராகிவிடுவர். சி.வை.தாமோதரம்பிள்ளையார் அதற்கு சான்று.
ஈழத்து பிராணர் தமிழோடு ஊறியவர் பொதுவில். ஆனால் இன்று கொழும்புக்கு வந்துவிட்ட சுமார்த்தம் பிரமணர் என்ற சாதியை பிரமணருக்குள் காட்டி, ஈழத்தின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் பிராமண மக்களிடம் பரவ முயலுகின்றது. இதனை பிராமாணர் உணர்ந்து ஆரியச் சதியை முறியடிக்க முன்வர வேண்டும். ஒருசிலரின் பிறழ்வுகள் சிலவேளைகளில் ஒரு சமூகத்தையே பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
ஈழத்துப் பிராமணர் கொழும்புக்கு சுமார்ந்தம் வரும்வரையிலும் ஆரிய சூழ்ச்சிக்கு அகப்படாதவர்கள். இன்னும் சொல்லப்போனால் கிருத்தவ மத ஆட்சிக்காலப்பகுதியில்( வெளி நாட்டவரின் ஆக்கிரமிப்பில்) ஈழவள நாடு இருந்தபோது ஆலய விக்கிரகங்களை காக்க போராடியவர்கள் பிராமணர் எனலாம். கிணறுகளுக்குள் போட்டும் மண்ணுக்குள் மறைத்தும் காத்து இன்றைய சந்ததிக்கு தந்தவர்கள் அவர்கள் என்றால் மிகையாகாது. ஏன் எங்கள் ஊர் ஐயர் இந்திய அமைதிப் படையிடம் சவுக்கடி வாங்கிய தழும்புகளை என்னிடம் காட்டினார். எல்லாம் தமிழ்ப் பற்றுச் செய்த சோதனை. பல ஐயர்மாரைப் பார்த்து கடவுளே நான் ஏன் ஐயராய்ப் பிறக்கவில்லை என்று சிறுவயதிலேயே சிந்தித்தவன். கண்ணை உற்றுநோக்கி பார்த்து பல பில்லி சூனியங்கள் தூரஓட்டும் வல்லமை கொண்டவர்களாக சைவ குருமார்களாக வாழும் பல பிராமணரை என் வாழ்வியலில் சந்தித்துள்ளேன்.
பிராமணர் என்பது சாதிக்கட்டமைப்பு என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாது. பிறப்பால்த்தான் பிராமணர் ஆகலாம் என்பது நியாயமானதில்லை. ஆனால் முறையான நியதிகளை கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே பிராமணர் என்பது என் அறிவு. அன்பு பக்தி அறிவு மூன்றும் நிரம்பியவர்களாக இருக்கவேண்டியது முதலாவது அடிப்படை தகுதி.
ஈழத்து பிராமணர்களை மயக்கி தனது மடியில்போடும் ஆரியச் சதியை ஈழத்து பிராமணர் உணர்வர் என்பது அசைக்கமுடியாத எனது நம்பிக்கை. ஏலவே பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையின் தேசியத்தை சிதைக்கும் துர்சுழலில் பலபாடங்களை உணர்ந்தவர்கள், எனவே ஆரிய ஏகாதிபத்தியமும் அவர்களால் உணரக்கூடியதே.
ஈழத்து பிராமணரை இந்தியாவோடு இணைத்து ஒப்பிடுவது பொருத்தமற்றது. தங்கள் கருத்துக்கு நன்றி
Post a Comment