"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Tuesday, February 2, 2010

உலக சைவ மாநாடு-சைவத்தமிழுக்கு கிடைத்த பேறு!

பன்னிரண்டாம் உலக சைவ மாநாடு எல்லாம் வல்ல சிவனருளால் நடைபெறவுள்ளது. மாநாட்டு நிகழ்வுகள் மாநாட்டு வலைப்பூவில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. சைவத் தமிழ் ஆர்வலர்கள் மாநாட்டு நிகழ்ச்சி நிரல்களை குறித்த வலைப்பூவிற்கு சென்று அறிந்து பயனடையும்வகையில் பதிவிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள சைவப் பெருமக்கள் இந்நிகழ்வுகளில் கலந்து சைவசமயம் பற்றிய பல்வேறு அரியவிடயங்களை அறிந்து பயனடைய இதுவொரு நல்ல பேறு என்றே பன்னிரண்டாவது சைவ மாநாட்டை சிறப்பிக்கலாம்.

அன்புள்ள பெற்றோர்களே,

உங்கள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு மாநாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றுவீர்! ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்றொரு பழமொழி உண்டு.சிறுவயதில் சைவப் பண்பாட்டைப் போதிப்பது நெறியான வாழ்வை உங்கள் பிள்ளைகள் நுகர ஏதுவாக்கும் பிரதான காரணியாகும். எனவே மாநாட்டு நிகழ்வுகள் நடைபெறும் தில்லைமாநகரத்து மக்களும் அதற்கு அருகாமையில் உள்ள மக்களும் கலந்துகொள்வதற்கு சிரமங்கள் மிகச்சொற்பமாதலால், அருமையான வாய்ப்பை தவறவிடாதீர்! வெளிநாடுகளில் இருந்தெல்லாம் அறிஞர்குழாம் கூடுகின்ற இம்மாநாட்டில் கலந்துகொண்டு பயனடைவீராக!

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.

என்ற ஔவையின் மூதுரையை மனதில் இருத்தின், அறிஞரைக் காண்பதுவும் அறிஞர்குழாத்தின் சொல்லைக் கேட்பதுவும் அறிஞர்குழாத்தின் பெருமைகளைப் பேசுவதும் அறிஞர்குழாத்துடன் கூடி வாழ்வதும் நன்மையை ஊட்டும் என்பதை உணர்ந்து கொள்ளலாம். எனவே, சைவ அறிஞர்குழாம் கூடுகின்ற இம்மாநாட்டில் பங்குபற்றுவது அருமையிலும் அருமையான அனுபவத்தை அளிக்கும் என்பது திண்ணம்!!!

இங்கே சொடுக்குவதன் மூலம் மாநாட்டு வலைப்பூவை சென்றடைந்து பயனடையலாம்.
உலக சைவ மாநாட்டு வலைப்பூ


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

நன்றி
"எம் கடன் பணி செய்து கிடப்பதே"
சிவத்தமிழோன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "உலக சைவ மாநாடு-சைவத்தமிழுக்கு கிடைத்த பேறு!"

Post a Comment