"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Thursday, May 28, 2009

செய்யக்கூடாத முப்பத்திரண்டு குற்றங்கள்

திருக்கோயிலில் செய்யக்கூடாத முப்பத்திரண்டு குற்றங்களையும் தீர்த்தத்திலும் நந்தவனத்திலும் செய்யக்கூடாத குற்றங்களையும் நாவலர் பெருமானின் சைவவினா விடை பட்டியலிட்டுள்ளது. குறித்தவற்றை பதிவாக்கியுள்ளேன். நன்றிகள்.

முப்பத்திரண்டு குற்றங்கள்

1)நந்திதேவருக்கும் சிவலிங்கப்பெருமானுக்கும் மத்தியிற் போதல்
2)தரிசனை செய்தபின் புறங்காட்டிவருதல்

3)ஒருகை குவித்து தரிசித்தல்

4) ஒரு பிரதட்சணம் செய்தல்

5)மேலே யுத்தரீயம் போட்டுக்கொண்டு தரிசித்தல்

6)கோபுரச்சாயையைக் கடத்தல்

7) கோயிலிலுண்ணுதல்

8)நித்திரைசெய்தல்

9)நின்மாலியத்தைத் தாண்டுதல்

10)நின்மாலியத்தைத் தீண்டுதல்

11)கையினால் விக்கிரகங்களைத் தீண்டுதல்

12)ருத்திரகணிகையரைக் கையினால் தீண்டுதல்

13) அவர்களோடு பேசுதல்

14)நோக்குதல்

15) வீணான வார்த்தைகள் பேசுதல்

16)கோயிற்காரிய மல்லாத சொல்லைச் சொல்லுதல்

17)தான் சொல்லாவிட்டாலும் ஒருவர் சொல்லுவதைக் கேட்டல்

18)உத்தமர்களை யவமதித்தல்

19)அற்பர்களை மதித்துப்பேசுதல்

20)அவ்விடத்திலிருக்கும் சிவசொத்தாகிய பொருளை அபகரிக்கும் சிந்தையோடு பார்த்தல்.

21)வேதங்களால் சொல்லப்படாத சிறுதெய்வங்களைப் பணிதல்

22)வேதமுதலான கலைகள் பாடமோதுதல்

23)உன்னத தானத்திலிருத்தல்

24)ஆசனத்திலிருத்தல்

25)ஒருவரைப் பார்த்து நகைத்தல்

25)பிணங்குதல் முதலான துர்க்குணங்களைப் பாராட்டுதல்

26)அருட்பாக்களையன்றி மற்றப்பாடலை மதித்துக்கேட்டல்

27)சண்டேசுரரிடத்தில் வஸ்திரத்தின்(ஆடையில் இருந்து) நூல் கிழித்துவைத்தல்

28)பலிபீடத்துக்கும் சந்நிதானத்துக்கும் மத்தியில் மற்றவரை வணங்குதல்

29)திருக்கோயிலினுள் பொடிமுதலியன போடுதல்

30)திரிசந்தியல்லாத காலங்களில் ஆலயத்திற் செல்லுதல்

31)இரண்டொரு பிரதட்சணம் செய்தல்

32)சிறப்பற்ற பாடல்கள் பாடுதல்



சிவதீர்த்தத்திலும் நந்தன வனத்திலும் செய்யத்தகாத காரியமென்ன?

சிவ தீர்த்தத்தில் உமிழ்நீர் துப்பலாகாது. மூக்குச் சிந்தலாகாது. மற்றுமுள்ள அசுசியான காரியஞ் செய்யலாகாது. நந்தனவனத்தும் இப்படியே.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "செய்யக்கூடாத முப்பத்திரண்டு குற்றங்கள்"

Post a Comment