"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Wednesday, May 13, 2009

அன்புத் தமிழகத்திற்கு,

அன்புத் தமிழகத்திற்கு,

தேர்தல் தொடங்கிவிட்டது. தேர்தலின்போது ஒவ்வொருமுறையும் கட்சிரீதியாக வாக்களிப்பீர்.சாதிரீதியாக வாக்களிப்பீர்.மதரீதியாக வாக்களிப்பீர். இம்முறை திராவிட இனம், தமிழினம் என்ற கொள்கையடிப்படையில் வாக்களியுங்கள்.

தமிழைக் காக்கும் கடமை உங்கள் வாக்குகளில் உள்ளது. ஈழநாட்டில் செந்தமிழ் படும் துன்பத்தைக் கருத்தில்க் கொண்டு வாக்களியுங்கள். வேலைவாய்ப்பு, மின்சாரம் இவையாவும் அடுத்த தேர்தலிலும் பார்த்து சமாளிக்கக்கூடிய பிரச்சினைகள், ஆனால் ஈழநாட்டில் செந்தமிழ்படும் துயரை இந்தத் தேர்தலில்த்தான் தீர்க்கவேண்டும். இந்தத் தேர்தலில் தீர்க்கப்படாவிட்டால், அடுத்த தேர்தலை நீங்கள் எதிர்கொள்ளும் சமயம்; ஈழநாட்டில் தமிழ் இல்லாதுபோகலாம்.

அன்பான என் இனிய தாய்த்தமிழகமே, ஈழத்தமிழரைக் கைவிட்டுவிடாதீர்.
நன்றி
தென்னாடுடைய சிவனே போற்றி

மக்கள் சேவையே மகேசன் சேவை

இங்கனம்
சிவத்தமிழோன்
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 comments: on "அன்புத் தமிழகத்திற்கு,"

கந்தர்மடத்திலிருந்து கவின் said...

நன்றி என் தமிழ் உறவே ..!
உங்கள் வேண்டுதல் நிறைவேறட்டும்.

Anonymous said...

தமிழ் இனி மெல்லச்சாகும்,
தமிழ்நாட்டில் தமிழனில்லை. அனைவரும் கோழைகள். முதுகெலும்பு அற்றவர்கள். தன்கைகளால் உளைத்து உண்ணத்தெரியாதவர்கள். இலவசம், இலவசம் ! இலவசத்திற்க்காக தன்மானத்தையும் விற்க்க தயார். தமிழன் பச்சோந்தியாய் காறி உமிழும் எச்சிலை விட கேவலமானவன்.
தமிழுக்கென்று ஒரு தலைவன் இருந்தான். வஞ்சகர்களின் சூழ்ச்சிவலையில் அகப்பட்டு இன்று தன்குலமானம் காக்க திராணியற்று தன் உயிர்விடவும் துணிந்து விட்டான். வஞ்சகர்கள் உச்சத்தில் கூடி கொட்டமடிக்கிறார்கள். காலம் இனிமாறாது அது வஞ்சகர்களின் கட்டுப்பாட்டில், தமிழ் இனி மெல்லச்சாகும். நான் இனி என் நாவால் தமிழன் என்று சொல்லமாட்டேன். தமிழ்நாட்டில் பிறந்ததால் தமிழ் இனத்துரோகி என்ற நிலையான களங்கத்திற்க்கு ஆளாகிவிட்டேன். தமிழ்தான் உலகின் மூத்த மொழி, தமிழந்தான் உயர்ந்த நாகரீகத்துக்கெல்லாம் சொந்தக்காரன் என்று வாதிட்டுவந்த நான் இனி மேல் தமிழனில்லை, தமிழை படிக்க மாட்டேன், எனது வம்சத்திற்கே ந தமிழன் என்ற அடையாழமில்லாமல் வளர்க்கப்போகிறேன். நான் இனி தமிழனில்லை

நான் இனி தமிழனில்லை
நான் இனி தமிழனில்லை

பாலாஜி...

Post a Comment